<ul>
<li>தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் -இந்திய வானிலை ஆய்வு மையம்</li>
</ul>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/food-combinations-to-never-eat-with-milk-details-in-pics-241205" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<ul>
<li>காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்</li>
<li>தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகம் வந்துள்ளனர்.</li>
<li>புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்துள்ளார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானாவும் வருகை</li>
<li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160க்கு விற்பனை</li>
<li>“ஆளுநர் திட்டமிட்டே விஷம பிரசாரம் செய்கிறார்” -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம்</li>
<li>ஒசூரில் பசுமை விமான நிலையம் - ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது</li>
<li>கோவில்பட்டி அருகே தளவாய்புரத்தில் மதுக்கூடத்தில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளி கைது</li>
<li>கோவையில் கடந்த ஆகஸ்டில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு பிறகு வனப்பகுதியில் விடப்பட்ட 'ரோலக்ஸ்' என்ற காட்டு யானை உயிரிழந்தது</li>
<li>சென்னையில் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது நோட்டமிட்டு விலை உயர்ந்த யமஹா ஆர்-15 பைக்கை திருடிய இளைஞர் கூட்டாளியுடன் கைது</li>
<li>சிவகங்கையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வச் சிற்பங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..</li>
</ul>