<p> </p>
<h2><strong> 14 மாவட்டங்கள்: </strong></h2>
<p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p>
<p>மழை பெய்யும் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p> </p>
<p>குறிப்பாக சென்னையை பொறுத்தவரை இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதாலும் காலை முதல் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.</p>
<p>மேலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், காலை முதல் மக்கள் சொந்த ஊர்களுக்கும், விசேஷங்களுக்கும் சென்று வரும் சூழலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்த நிலையில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய சூழல் உள்ளது. சென்னையில் காலையிலே பல இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது.</p>
<p> </p>
<p> </p>
<p> </p>