<p><strong>TN Fishermen Arrest:</strong> நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகுடன் 4 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து அண்மையில் தான் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல துவங்கினர். இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடங்கி இருப்பது, மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>