TN 12th Supplementary Exam: இத்தனை ஆயிரம் மாணவர்களா? சென்னையில்தான் அதிகம்- பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத வழிகாட்ட உத்தரவு!

7 months ago 5
ARTICLE AD
<p>உயர்கல்வி வழிகாட்டித்&zwnj; திட்டத்தின்கீழ் அரசுப்&zwnj; பள்ளியில்&zwnj; பயின்ற மாணவர்களில்&zwnj;, கடந்த மார்ச்&zwnj; 2025 நடைபெற்ற 12ஆம்&zwnj; வகுப்பு பொதுத்&zwnj; தேர்வில்&zwnj; தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களை தொடர்பு கொண்டு மறுதேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்&zwnj; வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p> <p><strong>இதுகுறித்து அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் கூறி உள்ளதாவது:</strong></p> <p>உயர்கல்வி வழிகாட்டித்&zwnj; திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்&zwnj; மேல்நிலைப்&zwnj; பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; 9 முதல்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு மாணவர்கள்&zwnj; அனைவருக்கும்&zwnj; உயர் கல்வி வழிகாட்டுதல்&zwnj; மற்றும்&zwnj; ஆலோசனைகள்&zwnj; வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள்&zwnj; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <h2><strong>மே 29 கடைசி</strong></h2> <p>அதன்&zwnj; தொடர்ச்சியாக, கடந்த மார்ச்&zwnj; 2025 நடைபெற்ற 12 ஆம்&zwnj; வகுப்பு பொதுத்&zwnj; தேர்வில்&zwnj; தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள்&zwnj;, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 14.05.2025 (புதன்கிழமை முதல்&zwnj;) 29.05.2025 (வியாழக்கிழமை, வரையிலான நாட்களில்&zwnj; (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 11 மணி முதல்&zwnj; மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.&nbsp;</p> <p>மாணவர்கள்&zwnj; தாங்கள்&zwnj; பயின்ற பள்ளிகளுக்கு நேரில்&zwnj; சென்று துணைத்&zwnj; தேர்விற்கு விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள்&zwnj; வழிகாட்டுதல்&zwnj; வழங்க வேண்டும் என்று கேட்டுக்&zwnj; கொள்ளப்படுகிறது.</p> <h2><strong>35 ஆயிரத்து 350 பேர் துணைத்தேர்வு எழுதலாம்</strong></h2> <p>பள்ளி தேர்வுகள்&zwnj; இயக்ககத்தின்&zwnj; தரவின்&zwnj;படி, 12ஆம்&zwnj; வகுப்பில்&zwnj; தேர்ச்சி பெறாமல்&zwnj; 28,292 மாணவர்களும்&zwnj;, தேர்வு எழுதாமல்&zwnj; 7,058 மாணவர்களும்&zwnj; உள்ளனர்&zwnj;. இம்மாணவர்கள்&zwnj; துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில்&zwnj;, மாணவர்கள்&zwnj; அனைவரும்&zwnj; துணைத்&zwnj; தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள்&zwnj; வழங்க வேண்டும்.</p> <p>இதுதொடர்பாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட முதன்மைக்&zwnj; கல்வி அலுவலர்கள்&zwnj; கேட்டுக்&zwnj; கொள்ளப்படுகிறார்கள்&zwnj;. மேலும்&zwnj; துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின்&zwnj; விவரங்களை தலைமை ஆசிரியர்களின்&zwnj; வாயிலாக எமிஸ் இணைய தளத்தில்&zwnj; பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.</p> <p><strong>மாவட்ட வாரியாக -12 ஆம்&zwnj; வருப்பு பொதுத்&zwnj; தேர்வில்&zwnj; தேர்ச்சி பெறாத, எழுதாத மாணவிகளின்&zwnj; எண்ணிக்கை விவரங்கள்&zwnj;</strong></p> <p><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/19/c5b3542af278305e522074355b93d24d1747639624936332_original.png" /></strong></p>
Read Entire Article