<p>பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 9) தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்துகொள்கின்றனர்.</p>
<h2><strong>எந்தெந்தப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வு?</strong></h2>
<p> </p>
<ol>
<li>அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர்</li>
<li>PCKG மேல்நிலைப் பள்ளி கோடம்பாக்கம்</li>
<li>GHSS வேளச்சேரி</li>
<li>GRT மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி</li>
<li>லேடி வெலிங்டன் மாடல் உயர்நிலைப் பள்ளி</li>
<li>திருவல்லிக்கேணி அரசு மாடல் உயர்நிலைப் பள்ளி</li>
<li>அரசு ஹோபர்ட் முஸ்லிம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ராயப்பேட்டை</li>
<li>அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் பள்ளி, கோட்டூர்புரம்</li>
<li>மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப் பள்ளி, ஆலந்தூர்</li>
</ol>
<p>ஆகிய பள்ளிகளில் செய்முறைத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.</p>
<h2><strong>அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு</strong></h2>
<p>இதைத் தொடர்ந்து நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.</p>
<p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவச் செல்வங்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>பொதுத் தேர்வுகள் எப்போது?</strong></h2>
<p>தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் 2026, <strong class="Yjhzub">மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி </strong>வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வுகள் காலை 10 மணி முதல் 01:15 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/how-many-people-can-fit-in-a-tata-sierra-249451" width="631" height="381" scrolling="no"></iframe></p>