<p>பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களைக் குறிப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுத்தேர்வு நாளில் தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த செய்தியை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p>
<h2><strong>முதல்முறையாக, கணினி மூலம் தேர்வு</strong></h2>
<p>அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் முதன்முதலாக கணினி மூலம் பார்வை மாற்றுத் திறனாளி ஆனந்தன் பொதுத்தேர்வு எழுதினார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் கணினி பயிற்சி பெற்ற அவர், தமிழக பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக, கணினி மூலம் தேர்வு எழுதினார்.</p>
<p>மேலும், தன் மாற்றுத்திறனாளி மகளை தேர்வறைக்குத் தூக்கிச் சென்று தாய் அமர வைத்த சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 3 சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ''கல்விதான் நம் உயிரினும் மேல்;</p>
<p>இதுதான் தமிழ்ச் சமூகம்! கல்விதான் நம் உயிரினும் மேலானது! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!'' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">இதுதான் தமிழ்ச் சமூகம்!<br />கல்விதான் நம் உயிரினும் மேலானது!<br /><br />பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்<br />சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! <a href="https://t.co/GNQpr5zCoB">pic.twitter.com/GNQpr5zCoB</a></p>
— M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1896810241700069651?ref_src=twsrc%5Etfw">March 4, 2025</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong> 11 ஆயிரம் பேர் ஆப்சென்ட்</strong></h2>
<p><br />தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 3) தொடங்கி நடைபெற்றது. சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வு நடந்த நிலையில், 11 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை.</p>
<p>எனினும் தமிழகம் முழுவதும் கல்வியை முக்கியமாகக் கருதிய மாணவர்கள், தேர்வெழுதிய நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>