<h2 style="text-align: left;">விழுப்புரம் மாவட்டத் தேர்ச்சி ( Villupuram 10th Result )</h2>
<div style="text-align: left;">இன்று 2024.2025 ஆம் கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 11120 பேரும் மாணவிகள் 11025 பேரும் ஆக மொத்தம் 22145 பேர் தேர்வு எழுதியதில் பெற்றுள்ளது. 91.58 சதவீதம் தேர்ச்சி.</div>
<div dir="auto" style="text-align: left;"> </div>
<div dir="auto" style="text-align: left;">விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 23 வது இடம் பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.34 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் 15 வது இடம் பெற்றுள்ளது.</div>
<h2 dir="auto" style="text-align: left;">விழுப்புரம் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி</h2>
<div dir="auto" style="text-align: left;">அரசு பள்ளி/ ஆதிதிராவிட பள்ளிகளில் 22 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு நிதியுதவி பெறும் பள்ளி / மெட்ரிக் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.</div>
<div dir="auto" style="text-align: left;"> </div>
<div dir="auto" style="text-align: left;">சென்ற 2023-2024 ஆம் கல்வியாண்டில் 89.41 சதவீதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 26 வது இடத்தில் இருந்து தற்போது 217 சதவீதம் உயர்ந்து 91.58 சதவீதம் பெற்று மாநில அளவில் 23 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.</div>
<div style="text-align: left;" data-smartmail="gmail_signature">
<div dir="ltr">
<h2><strong>முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்</strong></h2>
</div>
</div>
<p style="text-align: left;">10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 3ஆம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும், அடுத்தடுத்த இடங்களில் முறையே கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களும் பெற்றுள்ளன.</p>
<p style="text-align: left;">வழக்கமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் முதலிடங்களைப் பெறும். எனினும் இந்த முறை கொங்கு மண்டலம் கோட்டை விட்டுள்ளது. </p>
<h2 style="text-align: left;"><strong>கடைசி இடத்தில் வட மாவட்டங்கள்</strong></h2>
<p style="text-align: left;">இதில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பின்தங்கிய இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றன. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் 33ஆவது இடத்தில் 91.3 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. சென்னை 34ஆவது இடத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் 35ஆவது இடத்திலும் உள்ளன. இவர்களின் தேர்ச்சி விகிதம் முறையே 90.73 மற்றும் 89.82 ஆக உள்ளது.</p>
<p style="text-align: left;">அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்திலும் கள்ளக்குறிச்சி 37ஆம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டிலேயே கடைசியாக வேலூர் மாவட்டம், 85.44 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுகிறது.</p>