Teachers Protest: மார்ச் 7-ல் கோட்டை முற்றுகை: டிட்டோஜேக் தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு!

11 months ago 7
ARTICLE AD
<p>பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்&zwnj; கோரி 2025 மார்ச்&zwnj; 7-ல்&zwnj; கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜாக்&zwnj; எனப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநிலப்&zwnj; பொதுக்குழு அறைகூவல்&zwnj; விடுத்துள்ளது.</p> <ul> <li>தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின்&zwnj; ஊதிய முரண்பாடுகள்&zwnj; களையப்பட்டு 01.01.2006 முதல்&zwnj; ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்&zwnj; வழங்கப்பட வேண்டும்&zwnj;.</li> <li>தன்&zwnj; பங்கேற்பு ஒய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; ரத்து செய்யப்பட்டு பழைய ஒய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்&zwnj;.</li> <li>தொடக்கக் கல்வித்துறையில்&zwnj; 60 ஆண்டுகாலமாக நடைமுறையில்&zwnj; இருந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமையாக மாற்றியமைத்து குறிப்பாகப்&zwnj; பெண்ணாசிரியர்களின்&zwnj; பதவி உயர்வு வாய்ப்பினைப்&zwnj; பறிக்கும்&zwnj; வகையிலும்&zwnj;, ஊட்டுப் பதவிகளில்&zwnj; மாற்றம்&zwnj; செய்து ஒரு லட்சம்&zwnj; தொடக்கக்கல்வி ஆசிரியர்களின்&zwnj; பதவி உயர்வைப்&zwnj; பாதிக்கும்&zwnj; வகையிலும்&zwnj; வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243 முற்றிலும்&zwnj; ரத்து செய்யப்பட வேண்டும்&zwnj;.</li> <li>முடக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை மீண்டும்&zwnj; வழங்கப்பட வேண்டும்&zwnj; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்&zwnj; கோரி</li> </ul> <p><strong>2025 மார்ச்&zwnj; 7-ல்&zwnj; கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜாக்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழு அறைகூவல்&zwnj; விடுத்துள்ளது.</strong></p> <p>டிட்டோஜாக்&zwnj; பேரமைப்பின்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழுக்&zwnj; கூட்டம்&zwnj; 28.12.2024 சனிக்கிழமை முற்பகல்&zwnj; 11 மணிக்கு சென்னையில்&zwnj; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்&zwnj; கூட்டணியின்&zwnj; மாநில அலுவலகத்தில்&zwnj; டிட்டோஜாக்&zwnj; மாநில உயர்மட்டக்&zwnj; குழு உறுப்பினரும்&zwnj; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்&zwnj; கூட்டணியின்&zwnj; மாநில பொதுச்செயலாளருமான குணசேகரன்&zwnj; தலைமையில்&zwnj; நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்&zwnj; ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.</p> <p><strong>ஏமாற்றமே தொடர் கதை</strong></p> <p><strong>தீர்மானம்&zwnj; எண்&zwnj;: 1</strong></p> <p>கடந்த 2023 செப்டம்பர்&zwnj; 30ல்&zwnj; டிட்டோஜாக்&zwnj; சார்பில்&zwnj; நடத்துவதாக அறிவிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்&zwnj; அவர்களது அழைப்பின்&zwnj; பேரில்&zwnj; 23.09.2024 அன்று தலைமைச்&zwnj; செயலகத்தில்&zwnj; நடைபெற்ற பேச்சுவார்த்தையின்&zwnj; மீது பெரும்&zwnj; நம்பிக்கை கொண்டு பேரமைப்பு அறிவித்த போராட்டத்தை ஒத்திவைத்தது.</p> <p>ஆனால்&zwnj; அந்நம்பிக்கையைச்&zwnj; சிதைக்கும்&zwnj; வகையில்&zwnj; தொடக்கக் கல்வித்துறை சார்பில்&zwnj; கோரிக்கைகளின்&zwnj; மீது இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றத்தையும்&zwnj;, அதிருப்தியையும்&zwnj;, கோபத்தையும்&zwnj; ஏற்படுத்தியுள்ளது என்பதை டிட்டோஜாக்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழு ஏகமனதாகத்&zwnj; தெரிவித்துக்&zwnj; கொள்கிறது. பல பேச்சுவார்த்தைகளில்&zwnj; ஏமாற்றமே தொடர் கதையாகிவிட்ட சூழலில்&zwnj; தமிழ்நாட்டு ஆசிரியர்களின்&zwnj; கொந்தளிப்பான மனநிலையை தமிழ்நாடு அரசுக்கு வலிமையாக உணர்த்தும்&zwnj; வகையில்&zwnj; 23.09.2024 அன்று ஒத்திவைக்கப்பட்ட கோட்டை முற்றுகைப்&zwnj; போராட்டத்தை பேரெழுச்சியுடன்&zwnj; 07.03.2025 அன்று நடத்துவதென டிட்டோஜாக்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழு ஏகமனதாகத்&zwnj; தீர்மானிக்கிறது.</p> <p><strong>தீர்மானம்&zwnj; எண்&zwnj;: 2</strong></p> <p>டிட்டோஜாக்&zwnj; பேரமைப்பின்&zwnj; 2025 மார்ச்&zwnj; 7 கோட்டை முற்றுகைப்&zwnj; போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும்&zwnj; வகையில்&zwnj; டிட்டோஜாக்&zwnj; பேரமைப்பின்&zwnj; மாவட்ட, வட்டார நிர்வாகிகள்&zwnj; 04.01.2025 மற்றும்&zwnj; 05.01.2025 ஆகிய இரு நாட்கள்&zwnj; அந்தந்தப்&zwnj; பகுதியில்&zwnj; உள்ள அமைச்சர்கள்&zwnj; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்&zwnj; ஆகியோரைச்&zwnj; சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பதெனவும் டிட்டோஜாக்&zwnj; மாநில உயர்மட்டக்குழு மற்றும்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழு உறுப்பினர்கள்&zwnj; 06.01.2025 முதல்&zwnj; 08.01.2025 முடிய 3 நாட்கள்&zwnj; சென்னையில்&zwnj; அனைத்து அரசியல்&zwnj; கட்சிகளின்&zwnj; தலைவர்களையும்&zwnj; சந்தித்து டிட்டோஜாக்கின்&zwnj; கோரிக்கை மனுக்களை அளிப்பதெனவும்&zwnj; பொதுக்குழு ஏகமனதாகத்&zwnj; தீர்மானிக்கிறது.</p> <p><strong>தீர்மானம்&zwnj; எண்&zwnj;: 3</strong></p> <p>2025 மார்ச்&zwnj; 7-ல்&zwnj; நடைபெறவுள்ள கோட்டை முற்றுகைப்&zwnj; போராட்டத்தை பேரெழுச்சியுடன்&zwnj; நடத்த ஏதுவாக 01.02.2025, 08.02.2025, 15.02.2025, 22.02.2025 ஆகிய தேதிகளில்&zwnj; கீழ்க்கண்டவாறு மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக்&zwnj; கூட்டங்களை நடத்திடவும்&zwnj;,</p> <p>அக்கூட்டங்களில்&zwnj; மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்&zwnj; மற்றும்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழு உறுப்பினர்கள்&zwnj; பங்கேற்பதெனவும்&zwnj; ஏகமனதாகத்&zwnj; தீர்மானிக்கப்பட்டது.</p> <p><strong>தீர்மானம்&zwnj; எண்&zwnj;: 4</strong></p> <p>கல்வி உரிமைச்&zwnj; சட்டம்&zwnj; 2009ல்&zwnj; திருத்தம்&zwnj; மேற்கொண்டு 5 மற்றும்&zwnj; 6 ஆம்&zwnj; வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த &ldquo;அனைவருக்கும்&zwnj; தேர்ச்சி&rdquo; என்ற நடைமுறையை கைவிடப்&zwnj; போவதாக அறிவித்துள்ள ஒன்றிய அரசின்&zwnj; முடிவுக்கு டிட்டோஜாக்&zwnj; மாநிலப்&zwnj; பொதுக்குழு தனது கண்டனத்தைத்&zwnj; தெரிவித்துக்&zwnj; கொள்கிறது. மாணவர்களின்&zwnj; இடைநிற்றலை அதிகரிக்கச்&zwnj; செய்யும் இம்முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் டிட்டோஜேக் தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article