Tamilnadu Roundup: தவெக பிரமாண பத்திரம், பள்ளிகளுக்கு 12 நாள் அரையாண்டு விடுமுறை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்

5 hours ago 1
ARTICLE AD
<ul> <li>காந்தி மீது உள்ள வன்மத்தால் 100 நாள் வேலை திட்டத்தில் அவரது பெயரை நீக்குவதாக மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்.</li> <li>எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.</li> <li>கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்.</li> <li>ஈரோட்டில், <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பிரசாரத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து, அதற்கான உறுதிமொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் வழங்கிய தவெகவினர். விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்கும் அமைப்பாளர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.</li> <li>சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,350-க்கும், ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</li> <li>தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.</li> <li>தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு. மொழிப் பிரச்னையால் பின் தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்பை தடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்.</li> <li>சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்காக, ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன் வழங்கியதால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்ப்பு.</li> <li>காவல்துறை அதிகாரிகள் வீடகளில் ஆர்டர்லிகளாக உள்ள போலீசாரை திரும்பப் பெற்று, காவல் பணிக்கு பயன்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு.</li> <li>திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு&nbsp; உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை.</li> <li>வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருப்பதற்காக, பேருந்தை ஓட்டுநர் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்னி பேருந்து. இவ்விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.</li> </ul> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/rice-water-is-a-natural-tonic-for-hair-243326" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article