Tamilnadu Headlines: SIR-க்கு இன்றே கடைசி நாள்! கூண்டில் சிக்கிய புலி.. தொடரும் வருமான வரித்துறை சோதனை- 10 மணி செய்திகள்

1 day ago 2
ARTICLE AD
<ul> <li>சென்னையில் இன்று 10வது நாளாக 24 புறப்பாடு, 12 வருகை என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து. நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று பாதியாக குறைந்துள்ளது.</li> <li>உதகை மாவனல்லா பகுதியில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொன்ற T37 புலி 16 நாட்களுக்குப் பின் கூண்டில் சிக்கியது. ஆண் புலியை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்து வருகிறது வனத்துறை.</li> <li>சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் &nbsp;உள்ள பிரபல தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</li> <li>சென்னை ECR கொட்டிவாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற பீகாரைச் சேர்ந்த ராகேஷ் (35) என்பவர் பைக் மோதி உயிரிழப்பு.</li> <li>வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை (SIR) அளிக்க இன்று கடைசி நாள்!</li> <li>வரும் 16ம் தேதி வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வரும் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.</li> <li>இன்று &nbsp;தொடங்குகிறது 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.சென்னை பிவிஆர் சத்யம் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே இந்த திரைப்படங்களை திரையிட திட்டம்</li> <li>சென்னையில் உள்ள குப்பை கிடங்குகளில் இருந்து 48.41 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்</li> <li>தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-ல் இருந்து 75,035 ஆக உயர்த்தியது இந்திய தேர்தல் ஆணையம்.</li> </ul> <p>&nbsp;</p>
Read Entire Article