Surya Bhagavan: ஆதி சிவனான சூரிய பகவான்! தலைமைப் பண்பை தரும் சூரிய பகவானின் அருள்!!

1 year ago 7
ARTICLE AD
<p>காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வழி வழியாக நம் முன்னோர்கள் கூறி வந்தனர்.&nbsp; இது முற்றிலும் உண்மையானது. சூரியனிலிருந்து வரும் ஒளி நம் மீது படும்போது நமக்கு&nbsp; அளப்பரிய பல வைட்டமின் சக்திகள் கிடைக்கிறது.&nbsp; குறிப்பாக வைட்டமின் டி சக்தி சூரியனிலிருந்து நமக்கு கிடைக்கிறது.&nbsp; இப்படி உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தும் சூரியன் நமக்கு வழங்குகிறது.&nbsp; பல தோல் நோய்களிலிருந்து நாம் விடுபடுவதற்கான வழிவகைகளை சூரிய ஒளி செய்கிறது.</p> <h2><strong>சூரியன் என்னும் அற்புத நட்சத்திரம்:</strong></h2> <p>இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் சூரியன் ஆதாரமாக விளங்குகிறது . சூரியன் இல்லை என்றால் இந்த பூமி இருப்பது கடினம் என்று கூறலாம்.&nbsp; எல்லா கிரகங்களும் எப்படி சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறதோ.&nbsp; அதேபோன்று தலைவர்களை சுற்றி தொண்டர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் .&nbsp;</p> <p>ஜோதிடம் என்பது நமக்கு எட்டாக்கனி கிடையாது.&nbsp; ஒரு காரியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் சாராம்சம் மட்டும் தெரிந்தால் போதும். வெயிலாக இருந்தால் அது&nbsp; சித்திரை மாதம் ,&nbsp; மழையாக இருந்தால் அது&nbsp; ஐப்பசி மாதம் ,&nbsp; அதுவே குளிராக இருந்தால் அது மார்கழி மாதம்&nbsp; இப்படி சூரியனின் நகர்வையும் பூமியின்&nbsp; சுற்றுவட்ட பாதையை வைத்து காலங்களும் கணிக்கப்படுகிறது.&nbsp; இப்படி கிட்டத்தட்ட அனைத்துமே சூரியனை நம்பி இருப்பதால்&nbsp; அவரே நமக்கு தலைமை ஆகிறார் .&nbsp;</p> <p>மற்றவர்களை கட்டுப்படுத்தும் சக்தி சூரியனின் ஆதிக்கத்தை கொண்ட நபர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.&nbsp; தலைவர் என்பவர் யார் ?&nbsp; ஒரு தலைவர் என்பவர் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம் அல்லது சாந்தமாகவும் இருக்கலாம்&nbsp; ஆனால்&nbsp; எப்போதும் தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு&nbsp; நன்மையே செய்ய வேண்டும் என்பதுதான் விதி.&nbsp;&nbsp; ஜோதிடத்தில் சூரியனை தலைமை பண்போடு ஒப்பிடுவோம்.&nbsp;&nbsp;</p> <h2><strong>தலைமை பண்பு:</strong></h2> <p>சூரியன் மேஷத்தில் உச்சம் ஆகிறார்&nbsp; சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.&nbsp; இப்படி இரண்டு வீடுகளிலும் சூரியன் வலிமையோடு இருப்பவர்கள் நிச்சயமாக தொண்டர்களின் மனநலையை புரிந்து கொள்வார்கள் என்பது ஜோதிட சாஸ்திர&nbsp; விதி.&nbsp; சூரியன் வலிமையோடு இருப்பவர்கள் தான் நிச்சயமாக தலைவர் பதவிக்கு&nbsp; தகுதியானவர்கள் என்பது இல்லை. எந்த வீட்டில் சூரியன் இருந்தாலும் அவர் தலைவராவார்.&nbsp;</p> <p>ஆனால் எந்த காரியத்திற்காக ஒருவர் தலைமை ஏற்கிறார் என்பதை பொறுத்து&nbsp; ஜாதகத்தில் அதற்கான பலன்களும் மாறுபடும்.&nbsp; உதாரணத்திற்கு நாட்டின் தந்தை மகாத்மா காந்தி. காந்தியின் ஜாதகத்தில் சூரியன் ஆட்சியோ உச்சமும் பெறவில்லை&nbsp; ஆனால் அவர் தேசத் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.&nbsp; காரணம் அவர் தலைமையேற்ற&nbsp;&nbsp; போராட்டங்களும் அதன் காரணங்களும்.&nbsp; அவர் நாட்டின்&nbsp; விடுதலைக்காக தலைமை ஏற்றார்&nbsp; அவர் யாரையும் அதிகாரம் செய்யவில்லை. மாறாக அகிம்சையை கடைப்பிடித்தார்.&nbsp; இப்படியான காரணங்களுக்காக அவர் நம் நாட்டின்&nbsp; தந்தையாக மாறினார்.&nbsp; இதை வைத்து பார்க்கும் போது ஒருவருக்கு&nbsp; சூரியனின் வலிமையை வைத்து தலைமையின் பதவி&nbsp; இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.</p> <h2><strong>சூரிய பகவான் வழிபாடு :</strong></h2> <p>ஜாதகத்தில்&nbsp; சூரியன்&nbsp; நீச்சமாக இருக்கும் பட்சத்தில்&nbsp; நிச்சயமாக அவருக்கு தலைமை ஏற்கும்&nbsp; பங்கு இல்லை என்று கூறி விட முடியாது.&nbsp; நிச்சயமாக அவருக்கு தலைமைக்கான தகுதிகள் உள்ளது.&nbsp; ஆனால் அதை அவர் எப்படி கையாள வேண்டும் என்பதில் தான் சிக்கல் இருக்கும்.&nbsp; தனக்குத் தெரிந்ததை அவர் சரி என்று செய்யும்போது&nbsp; மற்றவர்களின் பார்வைக்கு அது தவறு என்று படலாம்.&nbsp; இப்படியான சூழ்நிலையிலும்&nbsp; ஜாதகத்தில் சூரியன் வலிமை குன்று இருக்கும் நிலையிலும், அவர் செல்ல வேண்டியது&nbsp; நவகிரகங்களில் இருக்கும் சூரிய பகவான் வழிபாடு.&nbsp; சில கோவில்களில்&nbsp; சூரிய பகவானுக்கு என்று தனி சன்னதி இருக்கும் ,&nbsp; ஆனால் பல கோவில்களில் நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருக்கும் சூரியனே நமக்கு பகவானாக&nbsp; இருக்கிறார்.&nbsp; இப்படியான சூழ்நிலையில்&nbsp; நிச்சயமாக நாம் சூரிய பகவானின் வழிபாடு வைத்திருக்கும் பொழுது&nbsp; நமக்கு தேவையான சூரியனின் கூட நலன்களை வாரி வழங்குகிறார் .</p> <p>ஞாயிற்றுக்கிழமைகளில்&nbsp; நீங்கள்&nbsp; அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று சூரிய பகவான் வழிபாட்டை செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.&nbsp; எது மாதிரியான&nbsp; மாற்றங்கள் ஏற்படும் என்றால்&nbsp; சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறார்கள்,&nbsp; சிலர்&nbsp; தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்,&nbsp; சிலரோ&nbsp; சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்படி எந்த மாதிரி நீங்கள் தொழிலை செய்தாலும் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை நிர்வகித்து வந்தாலும் கூட&nbsp; தலைமை பண்பு என்பது பன்மடங்கு&nbsp; உயர்வு அடையும்.&nbsp; நவகிரகங்களில் இருக்கும் சூரியனை வழிபட முடியவில்லை.&nbsp; வேலை சரியாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு&nbsp; சாதாரணமாக நீங்கள் சாலையில் செல்லும் போது வானத்தில் இருக்கும் சூரியனை நினைத்து&nbsp; மனதார பிரார்த்தனை செய்தாலே போதுமானது.&nbsp; அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். சங்கடங்கள் தீரும்&nbsp; வாழ்க்கை பிரகாசம்&nbsp; அடையும் .</p>
Read Entire Article