Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!

1 year ago 6
ARTICLE AD
<h2>சுக்கிர தசை தரும் &nbsp;பலன்கள் :</h2> <p>அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே &nbsp;சுக்கிர தசை என்று நீங்கள் வாசிக்கும்போதே &nbsp;வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம், முன்னேற்றம், செல்வ செழிப்பு, பணம், பதவி என்று அனைத்தையும் சுக்கிரன் தருவார் என்று நீங்கள் &nbsp;எண்ணி இருந்தீர்கள் என்றால் அதில் ஒன்றும் தவறில்லை &nbsp;ஆனால் சுக்கிரன் அவற்றை மட்டும் தருவதில்லை எதிர்மறையான சில பலன்களையும் கூட தருவார்.&nbsp; அது எந்த லக்னத்திற்கு எந்த புத்திக்கு என்பதை பொறுத்து மாறுபடும் &nbsp;வாருங்கள் சுக்கிர தசையில் 9 புத்திகளின் பலன்களைப் பற்றி பார்ப்போம்.</p> <h2><strong>சுக்கிர புத்தி (1200 நாட்கள் ) :</strong></h2> <p>ஏராளமாக செல்வம் சேரும். &nbsp;நவரத்தின ஆபரண சேர்க்கை ஏற்படும். &nbsp; வாழ்க்கையில் நாளுக்கு நாள் வசதிகள் பெருகும். &nbsp; மேலான பொருள் சேரும். &nbsp; சுக்கிர நீச்சம் பெற்று அமர்ந்தால் நன்மையான பலன்களை விட தீமையான பலன்கள் அதிகமாக நடைபெறும்.</p> <h2><strong>சூரிய புத்தி (360 நாட்கள் ) :</strong></h2> <p>கையில் உள்ள பொருள் விரயமாகும். செல்வம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். கடுமையான வியாதிகளால் பாதிப்பு உண்டாகும். &nbsp; வழக்கு விவகாரங்களில் பாதகமான போக்கு காணப்படும். சூரியனுடன் சுப கிரகங்கள் சேர்ந்திருந்தால் நன்மையான பலன்கள் நடைபெறும்.</p> <h2><strong>சந்திர புத்தி (600 நாட்கள் ) :</strong></h2> <p>எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். மனைவி மூலமாக பகை வந்து சேரும். குடும்பத்தில் உள்ள பெண்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சந்திரன் நீசம் பெற்று அமர்ந்தால் வருமானம் பாதிக்கப்படும். கடன் தொல்லை கொடுக்கும்.</p> <h2><strong>செவ்வாய்புத்தி (420 நாட்கள் ) :</strong></h2> <p>வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களையும் வாங்க முடியும். சில காரியங்கள் பெண்களால் தடைபட்டு நிற்கும். கடவுள் பக்தி அதிகமாகும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிப்பு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்க ஏற்படும்.</p> <h2><strong>ராகு புத்தி (1080 நாட்கள் ) :</strong></h2> <p>&nbsp;ஞான மார்க்கங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். மருந்து மாத்திரைகள் விஷமாகி அவற்றால் பாதிப்பு உண்டாகும். ராகு 5,9 அல்லது 11 ஆம் வீட்டில் அமர்ந்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத லாபங்கள் கிட்டும் .</p> <h2>குரு புத்தி (960 நாட்கள் ):</h2> <p>தன, தானிய லாபம் கிட்டும். &nbsp; குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். அரசாங்க நன்மை கிட்டும். வருமானமும் பெருகும். செலவும் அதிகமாகும்.&nbsp; குரு 6,8 அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்தால் பொருள்கள் களவு போகும். நெருப்பால் ஆபத்து உண்டாகும்.</p> <h2><strong>சனி புத்தி (1140 நாட்கள் ):</strong></h2> <p>கால்கள் கைகளில் நோய் ஏற்பட்டு குணமாகும். உணவை கண்டால் வெறுப்பாக இருக்கும்.பொருளாதார நெருக்கடி ஏற்படும்.மனதில் கவலைகள் அதிகமாகும்.சுக்கிரன் வீட்டில் சனியும் சனி வீட்டில் சுக்கிரனும் அமர்ந்தால் அரசாங்கத்தின் மூலமாக ஆதாயம் கிட்டும்.&nbsp;</p> <h2><strong>புதன் புத்தி (1020 நாட்கள்)</strong></h2> <p>நல்ல மனைவி அமைவாள். புத்திர பாக்கியம் கிட்டும்.வருமானம் பெருகும். வீடு,நிலம்,பொன் ஆபரணங்கள் புது வாகனம் போன்றவை சேரும். இசைத் துறையில் ஆர்வம் உண்டாகும். சிவப்பு நிற மனிதனால் பல வகையான ஆதாயங்கள் கிட்டும். புதன் 6, 8 அல்லது 12 ஆம் வீட்டில் அமர்ந்தால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். முற்பாதியில் சௌக்கியமும் பிற்பாதியில் நஷ்டங்களும் உண்டாகும்.&nbsp;</p> <h2><strong>கேது புத்தி (420 நாட்கள்)</strong></h2> <p>மிருகங்களால் ஆபத்து உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும்.&nbsp; குடும்பத்தில் நிம்மதி இராது.&nbsp; வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். கேது ஒன்று நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் அமர்ந்தால் அரசாங்க நன்மை கிட்டும். எதிரிகளை எளிதாக வெற்றி கொள்ள முடியும். தன தானிய லாபம் கிட்டும்.&nbsp;</p>
Read Entire Article