<p>இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் தொட்டு வர்த்தகமாகி வருகிறது.</p>
<p><strong>இந்திய பங்குச்சந்தை நிலவரம்:</strong></p>
<p>வர்த்த நேர தொடக்கத்தில் காலை 9.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.30% புள்ளிகள் உயர்ந்து 80,224 ஆகவும் நிஃப்டி 0.28% புள்ளிகள் உயர்ந்து 24,353 ஆகவும் வர்த்தக்கதை தொடங்கியது. </p>
<p>வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காலை 11.00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 171.99 அல்லது 0.02% உயர்ந்து 80,155.03 புள்ளி ஆகவும் நிஃப்டி 35.90 அல்லது 31.90% உயர்ந்து 24,324.70 புள்ளிகளில் வர்த்தகமாகியது. </p>
<p>சர்வதேச சந்தைகளில் நிலவும் நேரமறையான சூழல், அமெரிக்க தேர்தலுக்கு முன்பு வட்டி விகிதம் குறைக்கபடும் என்று எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. </p>
<p>இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாகவே ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஐ.டி. ஆட்டோமொபைல், மெட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. </p>
<p>நிஃப்டியை பொறுத்தவரையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹிண்டால்கோ, ஹெச்,சி,எல். டெக்., டி.சி.எஸ்., டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.</p>
<hr />
<p> </p>