<p>Sitaram Yechury Health: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, செயற்கை சுவாசம் உதவ்யுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>
<h2><strong>சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்:</strong></h2>
<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுவாச ஆதரவில் உள்ளார். அவரது உடல்நிலையை பல ஒழுங்குமுறை மருத்துவர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, அவரது உடல்நிலை இந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">Comrade Sitaram Yechury’s health condition <a href="https://t.co/NDPl8HE8K0">pic.twitter.com/NDPl8HE8K0</a></p>
— CPI (M) (@cpimspeak) <a href="https://twitter.com/cpimspeak/status/1833390537514049942?ref_src=twsrc%5Etfw">September 10, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong>தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி:</strong></h2>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரி, ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோமியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஒரு புதுப்பிப்பில், அவர் சுவாசப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 72 வயதான அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் பலதரப்பட்ட மருத்துவர்கள் குழுவிடமிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியாகியுள்ள அறிக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>