<p><strong>Siragadikka Aasai Serial July 9 : </strong> <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவி யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணி க்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலல் இன்றைய எபிசோட்டில் பாட்டி அனைவரின் பரிசையும் பாராட்டிப் பேசுகிறார். </p>
<div id=":r9" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":to" aria-controls=":to" aria-expanded="false">
<div dir="ltr">
<div dir="ltr">
<div dir="ltr">
<div dir="ltr">
<div> </div>
<div>பாட்டி : எல்லாரோட பரிசும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. எனக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சு. </div>
<div> </div>
<div>மனோஜ் : அப்ப அந்த ஸ்பெஷல் பரிசு யாருக்கு பாட்டி குடுக்க போறீங்க?</div>
<div> </div>
<div> </div>
<div><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/143907460fca3a1eef7899afa51352be1720512306440572_original.jpg" alt="" width="1200" height="675" /></div>
<div> </div>
<div>பாட்டி : எல்லாரும் எனக்கு பரிசு வாங்கி கொடுத்தீங்க. ஆனா அது எல்லாத்தையும் விட உணர்வுபூர்வமா பரிசு கொடுத்தது முத்து. அதே போல ஒருத்தரோட வாழ்க்கையில நினைவுகள் ரொம்ப முக்கியம். நான் பல வருஷமா பாக்கணும் நினைச்ச என்னோட தோழிகளே என் கிட்ட கூட்டிட்டு வந்தது முத்து தான். எனக்கு அடுத்த தலைமுறையும் என்னோட அனுபவத்த பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு மீனா எடுத்த வீடியோ உதவியாயிருக்கும்" என்கிறார் பாட்டி.</div>
<div> </div>
<div>சாமி ரூமில் இருந்து எடுத்து வந்து அந்த பரிசு பொருளை அனைவருக்கும் காட்டுகிறார் பாட்டி. அது ஆறு தலைமுறையாக இருக்கும் பாரம்பரிய நகை. இந்த நகையை தகுதியான அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போட்டியை வைத்ததாக பாட்டி சொல்கிறார்.</div>
<div> </div>
<div> அந்த பரிசை முத்துவுக்கும் மீனாவுக்கும் பரிசளிக்கிறார் பாட்டி. தினமும் அதற்கு பூஜை செய்ய வேண்டும். விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை பத்திரமாக கொடுக்க வேண்டும் என பாட்டி சொல்கிறார். முத்துவுக்கு மீனாவுக்கும் அந்த பரிசு கிடைத்ததில் விஜயா, ரோகிணி மற்றும் மனோஜ் முகமே மாறி விடுகிறது.</div>
<div> </div>
<div> மீனா அந்த நகை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது முத்து தினமும் பூஜை செய்துவிட்டு அந்த நகையை எடுத்து லாக்கரில் வைத்துவிட சொல்கிறான். மனோஜ் எடுக்கும் வீட்டில் நகை வெளியில் வைக்கவே பயமாக இருக்கிறது என்கிறான்.</div>
<div> </div>
<div> </div>
<div><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/fbbb4ab906f99a653ce77d26301176331720512275333572_original.jpg" alt="" width="1200" height="675" /></div>
<div> </div>
<div> </div>
<div>அடுத்த நாள் முத்து பாட்டியை ஊருக்கு பஸ் ஏத்திவிட்டு வீட்டுக்கு வந்ததும் மீனாவின் நகை கவரிங் நகையாக மாறியது குறித்து அனைவரையும் அழைத்து வைத்து பேசுகிறான். முத்து சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.</div>
<div> </div>
<div>விஜயா எதுவும் தெரியாதது போல அமைதியாக இருக்கிறாள். அண்ணாமலை நகை மாறியது பற்றி விஜயாவிடம் கேட்க " என்னைக் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்? தங்க நகை தான் அவங்க என்கிட்ட குடுத்தாங்களான்னு தெரியலையே" என விஜயா சொன்னதும் மீனா விஜயாவைப் பார்த்து முறைக்கிறாள். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எப்பிசோட் முடிவுக்கு வந்தது. </div>
</div>
</div>
</div>
</div>
</div>