Scholarship: மாதம் ரூ.7,500 உதவித்தொகை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- எப்படி? ஜூலை 10 கடைசி!

5 months ago 5
ARTICLE AD
<p>தமிழ்நாடு திறன்&zwnj; மேம்பாட்டுக்&zwnj; கழகத்தின் நான்&zwnj; முதல்வன்&zwnj; திட்டத்தின்கீழ் போட்டித்&zwnj; தேர்வுகள்&zwnj; பிரிவுப்படி, தமிழ்&zwnj;நாடு அரசின்&zwnj; யு.பி.எஸ்&zwnj;.சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத்&zwnj; திட்டத்தின் மதிப்பீட்டுத்&zwnj; தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p> <p>நான்&zwnj; முதல்வன்&zwnj; திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; போட்டித்&zwnj; தேர்வுப்&zwnj; பிரிவானது துணை&nbsp;முதலமைச்சரால்&zwnj; 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அந்தப் பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள்&zwnj; மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்&zwnj; தேர்வுகளை எளிதாக அணுகும்&zwnj; வண்ணம்&zwnj; பல பயிற்சித்&zwnj; திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.</p> <p>இந்நிலையில்&zwnj; 2023- 24க்கான தமிழ்&zwnj;நாடு அரசின்&zwnj; பட்ஜெட்&zwnj; உரையில்&zwnj;, தமிழ்நாடு திறன்&zwnj; மேம்பாட்டுக்&zwnj; கழகம்&zwnj; (14500), அகில இந்திய குடிமைப் பணித்&zwnj; தேர்வுப்&zwnj; பயிற்சி மையத்துடன்&zwnj; இணைந்து, ஒன்றிய அரசுப்&zwnj; பணியாளர்&zwnj; தேர்வாணையத்தின்&zwnj; குடிமைப்&zwnj;பணிகள்&zwnj; தேர்வுகளுக்காக பயின்று வரும்&zwnj; ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும்&zwnj; இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும்&zwnj; வகையில்&zwnj; ஒரு திட்டத்தை செயல்படுத்தும்&zwnj; என்று அறிவிக்கப்பட்டது.</p> <h2><strong>1000 பேருக்கு உதவித்தொகை</strong></h2> <p>இந்தத்&zwnj; திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj;, ஒவ்வொரு ஆண்டும்&zwnj; 1,000 சிவில்&zwnj; சர்வீசஸ்&zwnj; பயின்று வரும்&zwnj; மாணவர்கள்&zwnj;, மதிப்பீட்டுத்&zwnj; தேர்வு மூலம்&zwnj; தேர்வு&nbsp;செய்யப்படுவார்கள்&zwnj;. முதல்நிலைத்&zwnj; தேர்வுக்குத்&zwnj; தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும்&zwnj; 10 மாதங்களுக்கு மாதம்&zwnj; ரூ.7,500 வழங்கப்படும்&zwnj;. இத்திட்டம்&zwnj; கடந்த 2023- ஆம்&zwnj; ஆண்டு முதல்&zwnj; வெற்றிகரமாகச்&zwnj; செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p> <p>கடந்த 2024 மற்றும்&zwnj; 2025 -ஆம்&zwnj; ஆண்டுகளில்&zwnj; நடைபெற்ற யு.பி.எஸ்&zwnj;.சி முதல்&zwnj; நிலைத்&zwnj; தேர்வுகளில் முறையே 276 மற்றும்&zwnj;&nbsp;315 நான்&zwnj; முதல்வன்&zwnj; ஊக்கத்&zwnj; தொகை பயனாளி மாணவர்கள்&zwnj; முதன்மைத்&zwnj; தேர்வு எழுதத்&zwnj; தேர்வு செய்யப்&zwnj;பட்டனர்&zwnj;.</p> <h2><strong>ஜூலை 26-ல் தேர்வு</strong></h2> <p>இத்திட்டத்தின்&zwnj; படி, தமிழ்நாடு திறன்&zwnj; மேம்பாட்டுக்&zwnj; கழகம்&zwnj;, அதன்&zwnj; கீழ்&zwnj; இயங்கிவரும்&zwnj; நான்&zwnj; முதல்வன்&zwnj; போட்டித்&zwnj; தேர்வுகள்&zwnj; பிரிவின்&zwnj; வாயிலாக யு.பி.எஸ்&zwnj;.சி முதல்&zwnj; நிலைத்&zwnj;&nbsp;தேர்வு-2026-க்கு தயாராகும்&zwnj; மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத்&zwnj; தேர்வை 26.07.2025 அன்று நடத்தத்&zwnj; திட்டமிட்டுள்ளது.</p> <p>இதன்மூலம்&zwnj; தேர்ந்தெடுக்கப்படும்&zwnj; 1000 தமிழ்நாட்டைச்&zwnj; சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம்&zwnj; 7500 ரூபாய்&zwnj; வீதம்&zwnj; 10 மாதங்களுக்கு வழங்கப்படும்&zwnj;.</p> <p>கடந்த ஆண்டைப்&zwnj; போலவே, அண்ணா நிர்வாகப்&zwnj; பணியாளர் கல்லூரியின்&zwnj; கீழ்&zwnj; இயங்கி வரும்&zwnj; அகில இந்திய குடிமை பணிகள்&zwnj; பயிற்சி மையங்களுக்கான (ஆர்&zwnj;.ஏ. புரம்&zwnj; சென்னை, பாரதியார்&zwnj; பல்கலைக்கழகம்&zwnj; கோவை மற்றும்&zwnj; காமராஜர்&zwnj; பல்கலைக்கழகம்&zwnj; மதுரை) சேர்க்கை மதிப்பீடுத்&zwnj; தேர்வின்&zwnj; மதிப்பெண்&zwnj; அடிப்படையில்&zwnj; மேற்கொள்ளப்படும்&zwnj;.</p> <h2><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2> <p>மேற்படி பயிற்சி மையங்களைத்&zwnj; தேர்வு செய்வதற்கான விருப்பம்&zwnj; கோரும்&zwnj; விண்ணப்பம் பின்னர்&zwnj; தனியாக வெளியிடப்படும்&zwnj;.</p> <p>இந்த மதிப்பீட்டுத்&zwnj; தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும்&zwnj; அகில இந்திய குடிமை பணிகள்&zwnj; பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை பெற விரும்பும்&zwnj; ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச்&zwnj;&nbsp;சேர்ந்த தேர்வர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில்&zwnj; கொடுக்கப்பட்டிருக்கும்&zwnj; விரிவான அறிவிக்கையைப்&zwnj; படித்து பார்த்து, &zwnj; விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்&zwnj;. <strong>இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2025 ஆகும்&zwnj;.</strong></p> <p><strong>முக்கிய நாட்கள்&zwnj;</strong></p> <p>நுழைவுச்&zwnj; சீட்டு வெளியீடு - ஜூலை மூன்றாவது வாரம்&zwnj;.</p> <p>தேர்வு நாள்&zwnj; - 26.07.2025 (10.00 am - 12.00 pm)</p> <p>இவ்வாறு தமிழ்நாடு திறன்&zwnj; மேம்பாட்டுக்&zwnj; கழகம்&zwnj;, நான்&zwnj; முதல்வன்&zwnj; (போட்டித்&zwnj; தேர்வுகள்&zwnj; பிரிவு) சிறப்புத்&zwnj; திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article