SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

1 year ago 7
ARTICLE AD
<p>பட்டியலின சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.</p> <p>பட்டியலின சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது.</p> <p>இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பீலா திரிவேதி, கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வில் பீலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.</p> <p>இந்த தீர்ப்பை எதிர்த்து விசிக உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு<strong>&nbsp;</strong>தாக்கல் செய்தனர்.&nbsp;</p>
Read Entire Article