<p>தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக புதிதாக கட்சி தொடங்கிய வி.கே.சசிகலா அதன் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். </p>
<p>அதன்படி கட்சிக்கு “அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்சியானது வரும் சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் கட்சி தொடங்குவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா அதிரடியாக அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்திருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/soaked-fenugreek-water-benefits-when-drink-in-the-morning-know-in-tamil-252873" width="631" height="381" scrolling="no"></iframe></p>