<p>காலாண்டு விடுமுறையோடு ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை விடுமுறை வருவதால், 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.</p>
<p>புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வட இந்திய மாநிலங்களில் நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும், வெவ்வேறு இடங்களில் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது.</p>
<p>நாட்டின் நவராத்திரி விழா தொடங்கிவிட்ட நிலையில், அதன் நிறைவாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வியாழன் அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.</p>
<h2><strong>4 நாட்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை</strong></h2>
<p>அதேபோல அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜய தசமி (சரஸ்வதி பூஜை) மற்றும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி என்பதாலும் மொத்தம் நான்கு நாள்கள் விடுமுறை மாணவர்களுக்குக் கிடைக்க உள்ளது. </p>
<h2><strong>நடந்து வரும் காலாண்டுத் தேர்வு</strong></h2>
<p>11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10அம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு செப்டம்பர் 25ஆம் வரை நடைபெற உள்ளது. அதேபோல, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 அன்று தேர்வு தொடங்கின.</p>
<p>செப்.26ஆம் தேதி வரை இவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை ஒரு வார காலத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.</p>
<p>அந்த வகையில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் நவராத்திரி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளும் வர உள்ளன.</p>
<h2><strong>பொதுத்</strong> <strong>தேர்வுகள்</strong> <strong>எப்போது</strong><strong>?</strong></h2>
<p>கடந்தாண்டு போலவே 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/drinking-too-much-tea-can-cause-many-diseases-234678" width="631" height="381" scrolling="no"></iframe></p>