<h2>எஸ்.பி.பாலசுப்ரமணியம்</h2>
<p>கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவர் காலமானார். அவர் பாடல்கள் வழி மக்கள் அவரை நினைவு கூறாத நாள் இல்லை என்றே சொல்லலாம். பாடகர் எஸ்.பி.பி நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த காம்தார் நகர் பகுதியை எஸ்.பி.பி நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு அரசு விரைவில் முடிவெடுக்கு என எதிர்பார்க்கலாம்</p>
<p> </p>
<p> </p>