Raid - யை பார்த்து யாருக்கு பயம் ? - முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

6 months ago 8
ARTICLE AD
<p dir="ltr" style="text-align: left;"><strong>அதிமுக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட X தள பதிவில் ;&nbsp;</strong></p> <p dir="ltr" style="text-align: left;">முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என <br />வீர வசனம் பேசி , தமிழ்நாட்டின் முதல்வராக , தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள் , இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன ? தமிழ்நாடா ? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே ?</p> <p dir="ltr" style="text-align: left;">ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் ? <br />திரு எம்.கே ஸ்டாலின் அவர்களே - <br />அது கண்ணாடி. உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் ?</p> <p dir="ltr" style="text-align: left;">அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு <br />வந்த போது , கீழ்மாடியில் நீங்களும் ,<br />உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை <br />தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் <br />தவழ்ந்து சென்றீர்களா ? ஊர்ந்து சென்றீர்களா ?</p> <p dir="ltr" style="text-align: left;">எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் <br />காட்டி விட்டு , ஆளுங்கட்சியாக <br />வெள்ளைக் குடை காட்டினீர்களே - அப்போது தவழ்ந்து சென்றீர்களா ? <br />ஊர்ந்து சென்றீர்களா ?</p> <p dir="ltr" style="text-align: left;"><strong>எது ஸ்டாலினின் கை ?</strong></p> <p dir="ltr" style="text-align: left;">அண்ணா பல்கலை வழக்கில் <br />பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.</p> <p dir="ltr" style="text-align: left;">ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை.</p> <p dir="ltr" style="text-align: left;">ஞானசேகரன் முதல் தெய்வச் செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும் , அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை , உங்கள் கை.</p> <p dir="ltr" style="text-align: left;">அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில் , உங்கள் கீழ் இயங்கும் காவல் துறை மீது நம்பிக்கை இல்லாமல் , உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை , உங்கள் கை.</p> <p dir="ltr" style="text-align: left;">தேர்தல் கூட்டணிக்காக , மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை.</p> <p dir="ltr" style="text-align: left;">7.5% உள் இடஒதுக்கீடு வந்த போது , ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும் , அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான். அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ , அவியலோ செய்து கொண்டு இருந்தீர்களே. நினைவிருக்கிறதா ? அதனால் , மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.</p> <p dir="ltr" style="text-align: left;">கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள் , மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்.</p> <p dir="ltr" style="text-align: left;"><strong>இதற்கெல்லாம் பின்னர் வருவோம்</strong></p> <p dir="ltr" style="text-align: left;">நான் கேட்ட கேள்வி என்ன ?<br />#யார்_அந்த_தம்பி ?<br />உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் ?</p> <p dir="ltr" style="text-align: left;">உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே , ED ரெய்டு என்றதும் <br />ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார் ?</p> <p dir="ltr" style="text-align: left;">டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.</p> <p dir="ltr" style="text-align: left;">உங்களுக்கு தெம்பு இருந்தால் , திராணி இருந்தால் , வக்கு இருந்தால் , அதற்கு முதலில் பதிலை சொல்லி விட்டு , மற்றதைப் பேசுங்கள்.</p> <p dir="ltr" style="text-align: left;">உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார். ஆனால் ,&nbsp;மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.</p> <p dir="ltr" style="text-align: left;">மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி <strong>?</strong></p> <p dir="ltr" style="text-align: left;">என முடிவடைகிறது.</p>
Read Entire Article