Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!

1 year ago 7
ARTICLE AD
<p>தனது தேர்தல் வியூக ஆலோசனையினால், தற்போது 10 மாநிலங்களில் உள்ள அரசாங்கங்கள் தனது தேர்தல் உத்திகளில் வெற்றி பெற்று இயங்குகின்றன என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <h2><strong>பீகார் இடைத்தேர்தல்:</strong></h2> <p>பீகார் மாநிலத்தில் &nbsp;4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலானது வரும் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது, நவம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.&nbsp;</p> <p>இந்நிலையில், &ldquo;தனது பிரச்சாரங்களுக்கு எவ்வாறு பிரசாந்த் கிஷோர் நிதி பெறுகிறார் என்று மக்கள் அவரிடம் அடிக்கடி கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலும் , இவர் தேர்தல் நிதி தொடர்பாக , பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி பேசி வந்தனர்.</p> <h2><strong>&rdquo;குறைந்தபட்சம் 100 கோடி &rdquo;:</strong></h2> <p>இந்நிலையில் பீகார் இடைத்தேர்தல் தொடர்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் இருந்த பிரசாந்த் கிஷோர், &nbsp;பீகாரின் பெலகஞ்சில் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசுகையில், &ldquo;&nbsp; என்னுடைய பிரச்சாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? பீகாரில், என்னுடைய கட்டணத்தைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை.&nbsp;</p> <p>தேர்தல் வியூக ஆலோசனைக்காக, ஒரு தேர்தலுக்கு &nbsp;குறைந்தபட்சம் ரூ.100 கோடி வசூலித்தேன். பீகார் முழுவதிலும் தனக்கு நிகரான கட்டணத்தை யாரும் வாங்கியதில்லை. நான் வகுத்த &nbsp;தேர்தல் உத்திகளினால் கிட்டத்தட்ட 10 மாநிலங்களின் அரசாங்கம் இயங்குகிறது என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p> <p>அக்டோபர் 2 ஆம் தேதி, பிரசாந்த் கிஷோர் தனது புதிய அரசியல் கட்சியான &ldquo;ஜன் சூராஜ் கட்சியை&rdquo; அதிகாரப்பூர்வமாக பாட்னாவில் தொடங்கினார். கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்றதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;<br />&nbsp;<br />பீகாரில் 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது, 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும், அதில் 40 பெண் வேட்பாளர்கள் இருப்பார் என்றும் பிரசாந்த் கிஷோர் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது</p>
Read Entire Article