Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (4-1-25 ) மின் நிறுத்தம் - எங்க எங்கெல்லாம் தெரியுமா...?

11 months ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (04.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.&nbsp;</p> <h2 style="text-align: justify;">மாதாந்திர மின் பராமரிப்பு பணி&nbsp;</h2> <p style="text-align: justify;">தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.&nbsp;</p> <h2 style="text-align: justify;">மின்வாரிய செய்தி குறிப்பு&nbsp;</h2> <p style="text-align: justify;">அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில்நாளை 04.01.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும், பெசன்ட் நகர், டவுன் ஸ்டேஷன் ரோடு, மயூரநாதர் கோயில் மேற்கு தெரு, தெற்கு பட்டமங்கலத்தெரு, கச்சேரி ரோடு அகிய பகுதிகளில் நாளை 04.01.25 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><a title="Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!" href="https://tamil.abplive.com/sports/cricket/ind-vs-aus-sydney-test-why-rohit-sharma-is-not-playing-5th-test-at-sydney-details-here-211619" target="_self">Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!</a></p> <h2 style="text-align: justify;">சீர்காழி தாலுக்காவில் மின் நிறுத்தம்&nbsp;</h2> <p style="text-align: justify;">அதேபோன்று சீர்காழி மின்வாரிய கோட்டத்திலும் நாளை தினம் வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV சீர்காழி டவுன் 1, மாதானம் மற்றும் திருமுல்லைவாசல் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட மூன்று உயரழுத்த மின்பாதைகளில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது சீர்காழி மின்வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.</p> <p style="text-align: justify;"><a title="Shankar Salary: 'இந்தியன் 2' தோல்வியடைந்தாலும் 'கேம் சேஞ்சர்' படத்திற்கு வெயிட்டாக சம்பளம் வாங்கிய ஷங்கர்!" href="https://tamil.abplive.com/entertainment/director-shankar-salary-in-game-changer-movie-211616" target="_self">Shankar Salary: 'இந்தியன் 2' தோல்வியடைந்தாலும் 'கேம் சேஞ்சர்' படத்திற்கு வெயிட்டாக சம்பளம் வாங்கிய ஷங்கர்!</a></p> <h2 style="text-align: justify;">மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்&nbsp;</h2> <p style="text-align: justify;">திருக்கோலக்கா, P.K ரோடு, கோவில்பத்து, கொள்ளிடம் முக் கூட்டு, இரணியன்நகர், விளந்திடசமுத்திரம், புளிச்சகாடு, மாதானம், அரசாளமங்கலம், உமையாள்பதி, நல்லநாயகபுரம் வேம்படி, திருமுல்லைவாசல், காப்பியக்குடி, அரசூர், ஆர்பாக்கம், ஒதவந்தான்குடி, சுத்தியாம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><a title="Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்..." href="https://tamil.abplive.com/spiritual/thiruppavai-paadal-19-explaination-margazhi-month-12-celebration-kannan-aandazh-january-03-2025-211613" target="_self">Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...</a></p> <h2 style="text-align: justify;">மாறுதலுக்கு உட்பட்டது&nbsp;</h2> <p style="text-align: justify;">மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
Read Entire Article