Pollachi Western Bypass : பொள்ளாச்சி நகர் நெரிசலுக்கு விடை: மேற்கு புறவழிச்சாலை பணிகள் 80% நிறைவு!

2 days ago 3
ARTICLE AD
<p>கோவை : பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை</h2> <p>பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அமைக்கப்பட்டும் வரும் மேற்கு புறவழிச்சாலை பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.</p> <h2>&nbsp;திட்ட விவரங்கள் மற்றும் தேவை</h2> <p>பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் பழனிச்சாமியிடம் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியதன் பேரில், இந்தச் சாலைப் பணிகளுக்காக மொத்தம் ரூ. 73 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p> <h2>சாலை அமைவிடம்</h2> <p>இந்தச் சாலை, 8.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது, கோவை ரோட்டில் உள்ள ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர். பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்தூர், நல்லூர் வழியாக, இறுதியாக ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை நீள்கிறது. சாலை அமைப்பதற்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும், ரோட்டின் இருபுறமும் தலா மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.</p> <h2>கட்டுமானப் பணிகள்</h2> <p>திட்டப் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கியபோது, ஆரம்பத்தில் நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இதற்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன. அத்துடன், ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர், பணிகள் சில காலம் கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதி கிராம மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர்.</p> <h2>&nbsp;மீண்டும் வேகம் எடுக்கும் பணிகள்</h2> <p>கிடப்பில் போடப்பட்ட பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் துவங்கப்பட்டன. தற்போது, கிருஷ்ணா குளம் ரோட்டில் இருந்து ஜமீன் ஊத்துக்குளியை இணைக்கும் ஒரு வழிப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p> <h2>நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் தகவல்:</h2> <p>"மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் முடிய அடுத்தாண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல் கட்டமாகப் போடப்பட்ட தார் ரோட்டில், மேலும் ஒரு முறை தார் தளம் அமைத்து சாலை மேம்படுத்தப்படும். பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, பொள்ளாச்சி நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Read Entire Article