PM Vidyalaxmi Scheme: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பிணையில்லாக் கடன்; பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் பற்றி தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD
<p>தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் கடன் வழங்கும் வகையில், மத்திய அரசு புதிதாக பிரதமர் வித்யாலட்சுமி என்னும் திட்டத்தைத் தொடங்க உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p> <p>அது என்ன வித்யா லட்சுமி திட்டம்? (&nbsp;<a href="https://www.ndtv.com/education/centre-approves-pm-vidyalaxmi-scheme-allocates-rs-3-600-to-benefit-22-lakh-students-6962379">PM Vidyalaxmi scheme</a> )பார்க்கலாம்.</p> <h2><strong>வித்யா லட்சுமி திட்டம் என்றால் என்ன?</strong></h2> <p>தரமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் (Quality Higher Education Institutions - QHEIs) சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டமே பிரதமர் வித்ய லட்சுமி திட்டம் ஆகும். இதன்படி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்கு பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனை அளிக்கும்.</p> <p>ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதன்மூலம் மொத்த கல்விக் கட்டணமும் படிப்புக்கான பிற செலவுகளும் அளிக்கப்படும்.</p> <h2><strong>யாரெல்லாம் பயன் பெற முடியும்?</strong></h2> <p>என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய தரவரிசைப் பட்டியலில் (NIRF &nbsp;முதல் 100 இடங்களைப் பிடிக்கும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்விக் கடன் அளிக்கப்படும்.&nbsp; ) ஒட்டுமொத்த தரவரிசையில், பிரிவு வாரியான, துறை வாரியான தரவரிசையில் 100 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.</p> <p>அதேபோல என்ஐஆர்எஃப் தரவரிசையில் 101-200 வரை பிடித்த மாநிலக் கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். அதேபோல அனைத்து மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெறலாம்.</p> <h2><strong>22 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்</strong></h2> <p>ஒவ்வோர் ஆண்டும் என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலைப் பொருத்து வித்யா லட்சுமி கல்விக் கடன் திட்டத்துக்குத் தகுதியான கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும். இம்முறை 860 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற உள்ளன. PM-Vidyalaxmi திட்டத்தின்மூலம் 22 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>7.5 லட்சம் வரையான கல்விக் கடனுக்கு, 75 சதவீதத் தொகை அளவுக்கு மாணவர்களுக்கு வழங்கப்படும்.</p> <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/07/c4765044d5cc63f109713915ba3fb8a11730982437158332_original.jpg" /></p> <h2><strong>3 சதவீத வட்டி மானியம்</strong></h2> <p>அதேபோல 8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பெறும் கல்விக் கடனில் 3 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். எனினும் அவர்கள் வேறு எந்த அரசு உதவித்தொகையையும் பெறக் கூடாது. ஆண்டுதோறும் 1 லட்சம் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.</p> <p>அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, வித்யா லட்சுமி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். &nbsp;</p> <h2>&nbsp;<br /><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2> <p>* ஆர்வமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் மத்திய உயர் கல்வி அமைச்சகத்தின் <a href="https://www.education.gov.in/higher_education">https://www.education.gov.in/higher_education</a> என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.</p> <p>* அதில், 'PM-Vidyalaxmi' என்ற பக்கத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.</p> <p><strong>கூடுதல் விவரங்களுக்கு:&nbsp; <a href="https://www.education.gov.in/">https://www.education.gov.in/</a></strong></p>
Read Entire Article