பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூலை 10 ஆம் தேதி ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள பெடரல் சான்சலரியில் பாரம்பரிய முறையில் வரவேற்பு கிடைத்தது. ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமரும் பிரதமர் மோடியுடன் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983-ம் ஆண்டு இந்திரா காந்தி தான் அந்த நாட்டுக்கு சென்ற இந்தியப் பிரதமர்.