Parrots: கூட்டமாக வந்து வெள்ளைச் சோளத்தை சேதப்படுத்தும் கிளிகள்.. விவசாயிகள் கவலை!
1 year ago
15
ARTICLE AD
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நடப்பாண்டில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விளாத்திகுளம், எட்டையாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளை சோளத்தை கிளிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.