Pariksha Pe Charcha 2025: பிரதமர் மோடியுடன் இணையும் தீபிகா படுகோன், சத்குரு; எங்கு? எதற்கு?

10 months ago 7
ARTICLE AD
<p>பிரதமர் நரேந்திர மோடி, பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டுகிறது. 2025ஆம் ஆண்டில், 8ஆவது முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.</p> <p>பரிக்&zwnj;ஷா பே சார்ச்சா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடியின் பல்துறை வல்லுநர்களும் பிரபலங்களும் இணைந்து மாணவர்களைச் சந்தித்துப் பேச உள்ளனர்.</p> <h2><strong>விருந்தினர்களின் பட்டியல்</strong></h2> <p>சத்குரு</p> <p>தீபிகா படுகோன்</p> <p>மேரி கோம்</p> <p>அவனி லேகரா</p> <p>ருஜுதா திவேகர்</p> <p>சோனாலி சபர்வால்</p> <p>ஃபுட்ஃபார்மர் (ரேவன்ட் ஹிமத்சிங்கா)</p> <p>விக்ராந்த் மாஸ்ஸி</p> <p>பூமி பெட்னேகர்</p> <p>டெக்னிக்கல் குருஜி (கௌரவ் சவுத்ரி)</p> <p>ராதிகா குப்தா</p> <h2><strong>3.30 கோடி விண்ணப்பப் பதிவு</strong></h2> <p>2025ஆம் ஆண்டுக்கான பரிக்&zwnj;ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 14ஆம் தேதியோடு முடிவடைந்தது. டிசம்பர் 14ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.&nbsp;இந்த ஆண்டு சுமார் 3.30 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர்.</p> <p>பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களைக் கையாளவும் பிரதமர் மோடி 7 ஆண்டுகளாக ஆலோசனைகளை அளித்து வருகிறார்.</p> <h2><strong>நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?</strong></h2> <p>2018-ம் ஆண்டில் இருந்து &rsquo;பரிக்&zwnj;ஷா பே சார்ச்சா&rsquo; செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுத் தேர்வுகள், தேர்வு அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p> <h2><strong>தேர்வு செய்யப்படுவது எப்படி?</strong></h2> <p>விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைனில் <a href="https://innovateindia1.mygov.in/" rel="nofollow">https://innovateindia1.mygov.in/</a> என்ற இணைப்பில் கொள்குறி வகை கேள்விகளுக்கான போட்டி நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துக் கேள்வி கேட்கலாம்.&nbsp;</p> <p>இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2><strong>கூடுதல்</strong>&nbsp;<strong>தகவல்களுக்கு</strong><strong>:</strong>&nbsp;<a href="https://www.mygov.in/"><strong>&nbsp;mygov.in</strong></a></h2> <p>&nbsp;</p>
Read Entire Article