<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p>
<h2><strong>ஹனிமூனுக்கு வந்த வர்ஷினி:</strong></h2>
<p>அதாவது இசை விஷால் மற்றும் ஸ்ரீஜா ராகவ் ஆகியோர் ஏற்காட்டுக்கு வந்து இறங்கிய நிலையில் அடுத்ததாக வர்ஷினியும் இங்கு வந்து இறங்க ஸ்ரீஜா அதிர்ச்சி அடைகிறாள். </p>
<p>பிறகு ராகவ் நான் தான் வர்ஷினியை இங்க வர வைத்தேன். நாங்க ரெண்டு பேரும் தான் வாழ்க்கையில் சேர்ந்து வாழ போறோம் என சவால் விடுகிறான். மேலும் இருவரும் சேர்ந்து ஸ்ரீஜாவை வெளியே துரத்தி விடுகின்றனர். </p>
<h2><strong>காதலைச் சொன்ன இசை:</strong></h2>
<p>அதன் பிறகு ஃபயர் கேம்ப் நடக்க இசை விஷாலுக்கு ரோஸ் கொடுத்து காதலை வெளிப்படுத்துகிறாள். ஸ்ரீஜா ஜூஸில் போதை மருந்தை கலந்து ராகவ்வுக்கு கொடுக்க முயற்சி செய்கிறாள். </p>
<p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>