Pallavi MLA: நெருக்கடி கொடுத்த போலீஸ்.. முதல்வர் விஜயிடம் சொன்ன பல்லவி.. உடனே டிரான்ஸ்பர்!

1 week ago 3
ARTICLE AD
<p>என்னுடைய தொகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் நெருக்கடி கொடுத்ததாக நான் சொன்ன உடனேயே அதன்மேல் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்ததாக ஆர்.கே.நகர் தவெக எம்.எல்.ஏ., பல்லவி தெரிவித்துள்ளார்.</p> <p>நேர்காணல் ஒன்றில் பேசிய பல்லவி, &ldquo;நான் எம்.எல்.ஏ., ஆனது சந்தோசமாக இருக்கிறது. மக்களுக்கு சட்டபடி ஆதரவு தெரிவித்து சேவை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. யாருக்குமே இங்கு அரசியல் அனுபவம் கிடையாது. இனிமேல் தான் அதை கத்துக்கணும். அரசியல் என்றால் ஊழல் பண்ணுவது என்பதை தாண்டி மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தவெக ஆட்சியில் பெண்களுக்கு சலுகைகள் கொடுப்பதைக் காட்டிலும் பாதுகாப்பு இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.&nbsp;</p> <p>நான் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேறுகால விடுப்பு தொடர்பான கடிதம் கொடுக்க சென்றிருந்தேன். அப்போது தொகுதி எப்படி இருக்கிறது என கேட்டார். நான் அவரிடம் எங்க ஆர்.கே.நகர் தொகுதி பிரச்னையாக உள்ளது. அங்கிருக்கும் அதிகாரிகள் கூட இன்னும் நம்மை மதிக்க மாட்டேங்குகிறார்கள். எதிர்க்கட்சியின் ஆளுமை இன்னும் இருக்கிறது என சொல்லி விட்டு தலைமைச்செயலகம் வாசலுக்கு கூட வரவில்லை.&nbsp;</p> <p><iframe title="Kovai child murder | கோவை சிறுமி கொடூர கொலை! குற்றவாளிகள் சிக்கியது எப்படி? கை, கால் முறிந்தது!" src="https://www.youtube.com/embed/JHhNPpuWgMA" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>உளவுத்துறையில் இருந்து எனக்கு போன் வந்தது. விஜயிடம் சொன்னதைப் பற்றி கேட்டார்கள். நான் அதற்கு பெரிதாக அவரிடம் தெரிவிக்கவில்லை என கூறினேன். விஜயுடன் இவ்வளவு நாள் பயணித்திருக்கிறேன். இப்போது வேறுமாதிரி இருக்கிறார். அன்று மாலையே சென்னை மாநகராட்சி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.&nbsp;</p> <p>அதன்பிறகு திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் பற்றியும் சொன்னேன். அவரையும் இடமாற்றம் செய்துள்ளார். என்னுடைய பெயரில் லெட்டர் பேடு சென்றாலே அனுமதி கொடுக்க மாட்டார். அந்த போலீஸ் ஸ்டேஷனில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> பெயரை சொன்னாலே அனுமதி தர மாட்டார்கள். ரொம்ப நெருக்கடி கொடுத்தார்கள். அன்னதானம் தொடங்கி தண்ணீர் பந்தல் வைப்பது வரை எதற்கும் அனுமதி கிடையாது. ஒரு நோட்டு புத்தகம் கொடுக்க வேண்டும் என அனுமதி கேட்டாலே இந்த சந்தில் வைத்து இத்தனை பேருக்கு மட்டும் கொடுங்கள் என சொல்லுவார்.&nbsp;</p> <p>நான் அந்த இன்ஸ்பெக்டர் பற்றி சொல்லி இரண்டு நாட்களில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்படிப்பட்டவருக்கு நான் எந்தளவு உண்மையாக இருக்க வேண்டும். <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனவாகும். அது வருமா என ஒவ்வொரு நாளும் யோசித்தேன். இதுக்கு பிறகு எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றம் உண்டாகும். தமிழ்நாடு வேறு மாதிரி மாறும். என்னை நம்பி எனக்கு வாக்களித்த மக்களை நான் என்றும் கைவிடமாட்டேன். எந்த நேரத்திலும் மக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். எம்ஜிஆரை நான் பார்த்தது இல்லை. விஜயை &nbsp;மாதிரி எம்ஜிஆர் இருந்திருப்பாரா எனவும் தெரியவில்லை&rdquo; என பல்லவி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-to-the-body-if-you-dont-sleep-for-a-night-261171" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article