OPS: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலா?- அரசு போட்ட முக்கிய உத்தரவு!

10 months ago 7
ARTICLE AD
<p>மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p> <h2><strong>இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:</strong></h2> <p>கடந்த 01.04.2003 முதல்&zwnj; மாநில அரசுப்&zwnj; பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில்&zwnj; ஒன்றிய அரசுப்&zwnj; பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; (National Pension System) 01.01.2004 முதல்&zwnj; அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும்&zwnj; மாநில அரசுப்&zwnj; பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத்&zwnj; திட்டமே தொடர அணுமதிக்கப்பட்டது.</p> <h2><strong>ஒருங்கிணைந்த ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj;&nbsp;</strong></h2> <p>எனினும்&zwnj; மாநில அரசுப்பணியாளர்கள்&zwnj; 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள்&zwnj; விடுத்து வருகின்றனர்&zwnj;. இந்நிலையில்&zwnj;, 24.04.2025 அன்று ஒன்றிய அரசுப்&zwnj; பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது,</p> <p>எனவே, பழைய ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj;, பங்களிப்பு ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; மற்றும்&zwnj; ஒருங்கிணைந்த ஓய்வூதியத்&zwnj; திட்டம்&zwnj; ஆகிய மூன்று ஓய்வூதியத்&zwnj;&nbsp;திட்டங்கள்&zwnj; குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின்&zwnj; நிதி நிலையினையும்&zwnj;, பணியாளர்களின்&zwnj; ஓய்வூதியக்&zwnj; கோரிக்கைகளையும்&zwnj; கருத்தில்&zwnj; கொண்டு நடைமுறைப்படுத்தத்&zwnj; தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும்&zwnj; அதிகாரிகள்&zwnj; அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.</p> <p>* ககன்தீப் சிங்&zwnj; பேடி, இ.ஆ.ப., கூடுதல்&zwnj; தலைமைச்&zwnj; செயலாளர்&zwnj;, ஊரக வளர்ச்சி மற்றும்&zwnj; உள்ளாட்சித்&zwnj; துறை.</p> <p>* கே.ஆர்&zwnj;.சண்முகம்&zwnj;, முன்னாள்&zwnj; இயக்குநர்&zwnj;, Madras School of Economics</p> <p>* பிரத்திக்&zwnj; தாயள்&zwnj;, இ.ஆ.ப., துணைச்&zwnj; செயலாளர்&zwnj; (வரவு செலவு), நிதித்&zwnj; துறை, உறுப்பினர்&zwnj; செயலர்&zwnj;.</p> <h2><strong>9 மாத அவகாசம்</strong></h2> <p>இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும்&zwnj; பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள்&zwnj; சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p> <h2><strong>குழு கண் துடைப்புக்கா?</strong></h2> <p>எனினும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கையை அமைதிப்படுத்தவே இந்தக் குழு கண் துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.</p> <p>கடந்த காலங்களில் இதுபோன்ற குழுக்கள் ஏராளமாக அமைக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றின் பரிந்துரைகள் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்றும் அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.</p>
Read Entire Article