NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?

1 year ago 11
ARTICLE AD
<p><strong>NPS Vatsalya Scheme Calculator:</strong> குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து கோடிகளை ஈட்டுவது எப்படி என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.</p> <h2><strong>என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்:</strong></h2> <p>NPS வத்சல்யா என்பது குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட, தேசிய ஓய்வூதிய அமைப்பில் உள்ள ஒரு புதிய திட்டமாகும். அண்மையில் நடைமுறைக்கு வந்த NPS வாத்சல்ய யோஜனா திட்டம்,&nbsp; ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் நிர்வகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு,&nbsp; குழந்தைப் பருவத்தில் இருந்து 18 வயது வரை ஓய்வூதியக் காப்பீட்டை உருவாக்கலாம். மைனர் பெயரில் கணக்கு திறக்கப்பட்டு கார்டியனால் இயக்கப்படுகிறது. குற்ப்பிட்ட மைனர் மட்டுமே இந்த திட்டத்டின் பயனாளியாக கருதப்படுவர்.</p> <p><strong>NPS வாத்சல்யா தகுதி: </strong>அனைத்து சிறார்களும் (18 வயது வரை உள்ள தனிநபர்கள்) NPS வாத்சல்யா திட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.</p> <p><strong>NPS வாத்சல்யா பங்களிப்பு:&nbsp; </strong>வாத்சல்யா கணக்கைத் திறக்க, குறைந்தபட்ச தொடக்க பங்களிப்பு ரூ. 1,000 செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,000 செலுத்த வேண்டும்.</p> <h2><strong>என்பிஎஸ் வாத்சல்யா கணக்கை எப்படி திறப்பது?</strong></h2> <p>வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் போன்ற பதிவு செய்யப்பட்ட இடங்களில் ஆன்லைன் அல்லது நேரில் பெற்றோர் கணக்கைத் திறக்கலாம். இந்த செயல்முறையை NPS அறக்கட்டளையின் eNPS தளம் மூலமாகவும் கணக்கை திறக்க முடியும் . ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உட்பட பல வங்கிகள் என்பிஎஸ் வாத்சல்யா முயற்சியை எளிதாக்க PFRDA உடன் கூட்டு சேர்ந்துள்ளன.</p> <h2><strong>18 வயதிற்குப் பிறகு கணக்கு மாற்றம்:</strong></h2> <p>அறிவிப்பின்படி, குழந்தைக்கு 18 வயது ஆனதும், கணக்கு தானாகவே வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட (NPS) கணக்காக மாற்றப்படும். இந்த மாற்றம் NPS அடுக்கு (அனைத்து குடிமக்கள்) திட்டத்திற்கு தடையற்ற மாற்றத்தை அனுமதிக்கிறது.&nbsp; ஆட்டோ சாய்ஸ் மற்றும் ஆக்டிவ் சாய்ஸ் உட்பட அனைத்து முதலீட்டு அம்சங்களையும் செயல்படுத்துகிறது. ஆரம்பகால முதலீடு மற்றும் கட்டமைக்கப்பட்ட சேமிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம், NPS வாத்சல்யா இளைஞர்களுக்கான உறுதியான நிதி அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">📊 Your Pension Potential with <a href="https://twitter.com/hashtag/NPSVATSALYA?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NPSVATSALYA</a><br /><br />&bull; Annual Contribution: ₹10,000<br />&bull; Investment Duration: 18 years<br />&bull; Expected Corpus at 18: ₹5 lakh <a href="https://twitter.com/10?ref_src=twsrc%5Etfw">@10</a>% RoR<br /><br />Expected Corpus at 60:<a href="https://twitter.com/10?ref_src=twsrc%5Etfw">@10</a>% RoR: ₹2.75 Cr<a href="https://twitter.com/11?ref_src=twsrc%5Etfw">@11</a>.59%* RoR: ₹5.97 Cr<a href="https://twitter.com/12?ref_src=twsrc%5Etfw">@12</a>.86%# RoR: ₹11.05 Cr<br /><br />Start your investment today! <a href="https://t.co/S7pt00MuT2">pic.twitter.com/S7pt00MuT2</a></p> &mdash; PIB in Chandigarh (@PIBChandigarh) <a href="https://twitter.com/PIBChandigarh/status/1836329030695391394?ref_src=twsrc%5Etfw">September 18, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <h2><strong>NPS வாத்சல்யா கால்குலேட்டர்:</strong></h2> <p>பெற்றோர்கள் 18 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வருடாந்திர பங்களிப்பு செய்தால் . இந்த காலகட்டத்தின் முடிவில், எதிர்பார்க்கப்படும் 10% வருவாய் (RoR) விகிதத்தில், முதலீடு தோராயமாக ரூ.5 லட்சமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் 60 வயதை அடையும் வரை முதலீடு தொடர்ந்தால், எதிர்பார்க்கப்படும் கார்பஸ் வெவ்வேறு வருவாய் விகிதங்களின் அடிப்படையில் கணிசமாக மாறுபடும். 10 % வருவாய் விகிதத்தில் உங்களது நிதி வளர்ச்சி சுமார் ரூ.2.75 கோடியை எட்டும் .</p> <p>ஈக்விட்டியில் 50%, கார்ப்பரேட் கடனில் 30% மற்றும் அரசாங்கப் பத்திரங்களில் 20% என்ற பொதுவான NPS ஒதுக்கீட்டின் அடிப்படையில் சராசரியாக 11.59% ஆகவருமானம் மேம்பட்டால், எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.5.97 கோடியாக உயரக்கூடும் . அதேநேரம், 12.86% அதிக சராசரி வருமானத்துடன் (ஈக்விட்டியில் 75% மற்றும் அரசுப் பத்திரங்களில் 25% போர்ட்ஃபோலியோ ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்டது), நிதி வளர்ச்சி ரூ.11.05 கோடியை எட்டலாம். இந்த புள்ளிவிவரங்கள் தரவுகளின் அடிப்படையில் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையான வருமானம் மாறுபடலாம்.</p>
Read Entire Article