New CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யா காந்த்?

1 month ago 4
ARTICLE AD
<p>தலைமை நீதிபதி கவாயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.</p> <h3>புதிய தலைமை நீதிபதி:</h3> <p data-start="79" data-end="319">நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரையின் பேரில் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.</p> <p data-start="321" data-end="654">தலைமை நீதிபதி கவாய் நவம்பர் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.&nbsp; இதனை தொடர்ந்து, நீதிபதி சூர்யா காந்த் நவம்பர் 24 அன்று தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். அவரது பதவிக்காலமானது&nbsp; 2027 பிப்ரவரி 9 வரை சுமார் 15 மாதங்கள் அந்தப் பதவியில் தொடர்வார். ஹரியானாவிலிருந்து வரும் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையையும் சூர்யா காந்த் பெறுகிறார்.</p> <h3 data-start="661" data-end="690"><strong data-start="665" data-end="690">சூர்யா காந்தின் பயணம்</strong></h3> <p data-start="692" data-end="1108">பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசாரில் பிறந்த சூர்யா காந்த், ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். சட்டத்துறையில் சிறந்து விளங்கிய அவர், 2000-ஆம் ஆண்டு ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.</p> <p data-start="692" data-end="1108">2004-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார். பின்னர், 2019 மே 24 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்.</p> <h3 data-start="1115" data-end="1158"><strong data-start="1119" data-end="1158">மென்மையான அணுகுமுறையால் பிரபலமானவர்</strong></h3> <p data-start="1160" data-end="1444">இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள நீதிபதி சூர்யா காந்த், தாராளமான மற்றும் மனிதநேய பார்வைக்காக நீதித்துறையில் தனித்தன்மை பெற்றவர்.</p> <p data-start="1160" data-end="1444">அவரது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு முழு வாய்ப்பும் வழங்கப்படுவதாகவும், சிறிய வழக்குகள் கூட ஆழமாகக் கேட்டு தீர்வளிப்பதாகவும் கூறப்படுகிறது.</p> <p data-start="1446" data-end="1693">சமீபத்தில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயிடம் காலணியை வீசிய வழக்கறிஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப மறுத்து, &ldquo;இதை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை&rdquo; என்று கூறிய அவரது முடிவு, நீதித்துறையில் பெருந்தன்மையின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.</p> <h3 data-start="1700" data-end="1725"><strong data-start="1704" data-end="1725">முக்கிய வழக்குகள்</strong></h3> <p data-start="1727" data-end="1787">பீகார் SIR (தேர்தல் பட்டியல் திருத்தம்), சிவசேனா தேர்தல் சின்னம் தகராறு, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுதல் மற்றும் டிஜிட்டல் கைதுகள் உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் விசாரித்துள்ளார்.</p> <p data-start="1727" data-end="1787"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/find-out-when-is-the-right-time-to-drink-milk-and-what-are-the-disadvantages-of-drinking-it-at-the-wrong-time-237992" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article