National Award for Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது; ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்

1 year ago 7
ARTICLE AD
<p>இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.&nbsp;இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. &nbsp;</p> <p>இதில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது.</p> <p>இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக உயர் கல்வி அமைச்சகம் சார்பில் பொறியியல் மற்றும் டிப்ளமோ, கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான விருது அழைப்பு விடுக்கப்பட்டது.</p> <p>தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?</strong></p> <p>* பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.</p> <p>* மாநில அரசு, யூனியன் பிரதேசப் பள்ளி ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.</p> <p>* மத்திய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள், ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.</p> <p>* சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ&nbsp; பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.</p> <p>* எனினும் குறைந்தது 10 ஆண்டுகள் அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒப்பந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது.</p> <p>* விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் யாரும் டியூஷன் எடுத்துக்கொண்டு இருக்கக் கூடாது.</p> <p><strong>முக்கியத் தேதிகள்</strong></p> <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/94896a00c55473e791c2ac1a721d284b1720094623674332_original.jpg" /></p> <p>இதுகுறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கூறியுள்ளதாவது:</p> <p>மனிதவள மேம்பாட்&zwnj;டுத்துறை இயக்குநரின்&zwnj; கடிதத்தில்&zwnj; 2024 ஆம்&zwnj; ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர்&zwnj; விருதிற்கு விண்ணப்பிக்கும்&zwnj; ஆசிரியர்கள்&zwnj; அவர்தம்&zwnj; விவரங்களை நேரடியாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம்&zwnj; மூலம்&zwnj; 27.06.2024 முதல்&zwnj; 15.07.2024 ஆம்&zwnj; தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>மேலும்&zwnj; ஒவ்வொரு மாவட்டத்திலும்&zwnj;, கீழ்க்கண்டவாறு மாவட்டத்&zwnj; தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத்&zwnj; தேர்வு செய்து மாநிலத்&zwnj; தேர்வுக்&zwnj; குழுவிற்கு தேர்வு பட்டியலை 25.07.2024 தேதிக்குள்&zwnj; இணையதளம்&zwnj; வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்&zwnj;டுள்ளது.</p> <p>மாவட்டத்&zwnj; தேர்வுக்&zwnj; குழுவில்&zwnj; சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்&zwnj; கல்வி அலுவலர்&zwnj; தலைவராகவும்&zwnj;. மாநிலப்&zwnj; பிரதிநிதியாக ஒருவரும்&zwnj;, மாவட்ட ஆட்சியரின்&zwnj; பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர்&zwnj; ஒருவரையும்&zwnj; உட்படுத்தி மாவட்ட தேர்வுக்&zwnj; குழுவினை அமைக்க வேண்டும்.</p> <p>மாவட்ட நிலையில்&zwnj; விண்ணப்பித்த ஆசிரியர்களின்&zwnj; விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள்&zwnj; வீதம்&zwnj; தேர்வு செய்து, மாநிலத்&zwnj; தேர்வுத்&zwnj; குழுவிற்குப்&zwnj; பரிந்துரைக்க வேண்டும்&zwnj;.</p> <p>மாவட்டத்&zwnj; தேர்வுக்&zwnj; குழுவில்&zwnj; சம்பந்தப்பட்ட மாவட்டத்தின்&zwnj; மாவட்ட ஆசிரியர்&zwnj; கல்வி மற்றும்&zwnj; பயிற்சி நிறுவனத்தின்&zwnj; முதல்வர்&zwnj; மாநிலப்&zwnj; பிரதிநிதியாக செயல்படுவார்&zwnj;.</p> <p>மேலும்&zwnj;, மாவட்ட ஆட்சியரின்&zwnj; பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர்&zwnj; சார்ந்த விவரங்களை மாவட்ட ஆட்சியர்&zwnj; அலுவலகத்தில்&zwnj; இருந்து பெற்று, அவரை மாவட்டத்&zwnj; தேர்வுக்குழு உறுப்பினராக உட்படுத்தி, தேசிய நல்லாசிரியர்&zwnj; விருதிற்கான மாவட்டத்&zwnj; தேர்வுக்&zwnj; குழுவினை அமைத்து தேசிய நல்லாசிரியர்&zwnj; விருதிற்கான நல்லாசிரியரைத்&zwnj; தேர்ந்தெடுக்கும்&zwnj; பணியினை 25.07.2024 மாலை 05 மணிக்குள்&zwnj; முடிக்க வேண்டும்.</p> <p>மேலும்&zwnj;, மாவட்டங்களில்&zwnj; இருந்து தேசிய நல்லாசிரியர்&zwnj; விருதிற்கான ஆசிரியர்களின்&zwnj; விண்ணப்பங்களைப்&zwnj; பரிசீலனை செய்யும்&zwnj;போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்&zwnj; துறை இயக்குநரின்&zwnj; கடிதத்தில்&zwnj; தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைக்&zwnj; கவனத்தில்&zwnj; கொண்டு, எவ்வித புகாருக்கும்&zwnj; இடமின்றி செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.</p> <p>கூடுதல் விவரங்களுக்கு: <a href="https://nationalawardstoteachers.education.gov.in/">https://nationalawardstoteachers.education.gov.in/</a></p>
Read Entire Article