MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! எலிமினேட்டரில் மிரட்டிய மும்பை? என்ன செய்யும் குஜராத்?

6 months ago 7
ARTICLE AD
<p><a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடரில் குவாலிஃபயர் 1ல் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், கோப்பைக்கு ஆர்சிபி அணிக்காக மல்லுகட்டப்போவது யார்? என்ற கேள்விக்கு மும்பை, குஜராத், பஞ்சாப் அணிகள் களமிறங்கியுள்ளன.</p> <p>எலிமினேட்டர்:</p> <p>குவாலிஃபயர் 2ல் பஞ்சாப்புடன் ஆடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா -ஜானி பார்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினர்.&nbsp;</p> <p>பார்ஸ்டோ சரவெடி:</p> <p>ஆட்டத்தை தொடங்கியது முதலே இருவரும் அதிரடியாகவே ஆடினர். ஏனென்றால் இந்த போட்டியில் தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை உண்டாகும். ஓவருக்கு 12 ரன்கள் வீதம் இருவரும் விளாசினர். &nbsp;பார்ஸ்டோ பவுண்டரிம், சிக்ஸருமாக விளாசினார். அபாரமாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ஜானி பார்ஸ்டோ சாய் கிஷோர் சுழலில் அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.&nbsp;</p> <p>அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், மும்பையின் ரன்வேகம் குறையவே இல்லை. ரோகித் - சூர்யா ஜோடி அபாரமாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்களை கடந்து 150 ரன்களை நெருங்கியது. சூர்யா பட்டாசாய் வெடித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது ரன்வேட்டையை தனியாக நடத்திக் கொண்டிருந்தார்.&nbsp;</p> <h2><strong>பட்டையை கிளப்பிய ரோகித்:</strong></h2> <p>அரைசதம் கடந்தும் ரோகித்சர்மா பட்டையை கிளப்பினார். &nbsp;சூர்யகுமார் யாதவும் சாய் கிஷோர் சுழலில் சிக்கி அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 1பவுண்டரி 3 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரோகித்சர்மா தனது ரன்வேகத்தை மேலும் அதிகரித்தார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார்.&nbsp;</p> <h2><strong>கடைசியில் தடுமாற்றம்:</strong></h2> <p>அவர் 50 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் திலக் வர்மாவை சிராஜ் அவுட்டாக்கினார். அவர் 11 பந்துகளில் 3 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று ரன்வேகம் குறைந்தது.&nbsp;</p> <h2><strong>பாண்டயா தாண்டவம்:</strong></h2> <p>நமன்தீர் அதிரடி காட்ட முயற்சித்த உடனே பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். ஆனாலும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். கடைசி ஓவரை கோட்சி பதற்றத்துடன் வீசியதால் ஒயிட்கள் ஏராளமான வந்தது. இதனால் 9 பந்துகளை வீசினார். இதில் 3 சிக்ஸர் வந்ததால் மும்பை அணி குஜராத்திற்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 3 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்தார்.</p> <p>கோட்ஸி 3 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்தார். சிராஜ் 4 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article