<p style="text-align: justify;"><strong>Mayiladuthurai Power Shutdown:</strong> மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (18.12.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. </p>
<h3 style="text-align: justify;">மாதாந்திர மின் பராமரிப்பு பணி </h3>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.</p>
<h3 style="text-align: justify;">மின்நிறுத்த நேரம் </h3>
<p style="text-align: justify;">பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். </p>
<p style="text-align: justify;"><strong>மணல்மேடு, மயிலாடுதுறை, பேச்சாவடி மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி</strong></p>
<p style="text-align: justify;">அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டம் மற்றும் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட மணல்மேடு, மயிலாடுதுறை, பேச்சாவடி மற்றும் பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் 18.12.2025 இன்றைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என சீர்காழி செயற்பொறியாளர் மூர்த்தி மற்றும் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.</p>
<h3 style="text-align: justify;">மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் </h3>
<p style="text-align: justify;">மயிலாடுதுறை துணை மின்நிலையம் </p>
<p style="text-align: justify;">* கிளியனூர் </p>
<p style="text-align: justify;">* அகர கீரங்குடி</p>
<p style="text-align: justify;">* எலந்தங்குடி</p>
<p style="text-align: justify;">* அரிவளூர் </p>
<h3 style="text-align: justify;">பெரம்பூர் துணை மின் நிலையம்</h3>
<p style="text-align: justify;">* பெரம்பூர் </p>
<p style="text-align: justify;">* கடக்கம்</p>
<p style="text-align: justify;">* கிளியனூர் </p>
<p style="text-align: justify;">* சேத்தூர் </p>
<p style="text-align: justify;">* முத்தூர்</p>
<p style="text-align: justify;">* எடக்குடி</p>
<p style="text-align: justify;">* பாலூர்</p>
<p style="text-align: justify;">*கொடைவிளாகம்</p>
<p style="text-align: justify;">* ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்</p>
<h3 style="text-align: justify;">மணல்மேடு துணை மின் நிலையம் </h3>
<p style="text-align: justify;">* மணல்மேடு </p>
<p style="text-align: justify;">* ராதா நல்லூர் </p>
<p style="text-align: justify;">* கிழாய் </p>
<p style="text-align: justify;">* கடலங்குடி </p>
<p style="text-align: justify;">* திருமங்கலம் </p>
<p style="text-align: justify;">* காளி</p>
<p style="text-align: justify;">* இளந்தோப்பு</p>
<p style="text-align: justify;">* பட்டவர்த்தி</p>
<p style="text-align: justify;">* மண்ணிப்பள்ளம்</p>
<p style="text-align: justify;">* சித்தமல்லி</p>
<p style="text-align: justify;">* வடவாஞ்சார்</p>
<p style="text-align: justify;">* திருச்சிற்றம்பலம்</p>
<p style="text-align: justify;">* திருவாளப்புத்துர்</p>
<p style="text-align: justify;">* வரதம்பட்டு</p>
<p style="text-align: justify;">* நமச்சிவாயபுரம் </p>
<p style="text-align: justify;">* ஆத்தூர்</p>
<p style="text-align: justify;">* நராயணமங்கலம்</p>
<p style="text-align: justify;">* பாண்டூர்</p>
<p style="text-align: justify;">ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">மாறுதலுக்கு உட்பட்டது </h3>
<p style="text-align: justify;">மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">பொதுமக்களுக்கு வேண்டுகோள்</h3>
<p style="text-align: justify;">மயிலாடுதுறை கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தப் பணிகளின் காரணமாக ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">*மேலும் மின் நிறுத்தம் காரணமாக, குடிநீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;"> * மாலையில் 05.00 மணிக்கு முன்னரே பணிகள் நிறைவு பெற்றால், உடனடியாக மின் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">* இப்பணி குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.</p>
<p style="text-align: justify;">இந்த அறிவிப்பானது, தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் விடுக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>