Mayiladuthurai Power Shutdown (06.09.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் தடை: நாளை உங்க ஏரியாவுல கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க!

3 months ago 4
ARTICLE AD
<p style="text-align: left;"><strong>Mayiladuthurai Power Shutdown:</strong> மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (06.09.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.&nbsp;</p> <h3 style="text-align: left;">மாதாந்திர மின் பராமரிப்பு பணி&nbsp;</h3> <p style="text-align: left;">தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.&nbsp; மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.</p> <h3 style="text-align: left;">மின்நிறுத்த நேரம்&nbsp;</h3> <p style="text-align: left;">பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.&nbsp;</p> <h3 style="text-align: left;">ஆச்சாள்புரம் துணைமின் நிலையம்&nbsp;</h3> <p style="text-align: left;">எதிர்வரும் 06-09-2025 சனிக்கிழமை அன்று 110/33-11KV ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.</p> <ul style="text-align: left;"> <li style="text-align: justify;">ஆச்சாள்புரம்</li> <li style="text-align: justify;">மாங்கனாம்பட்டு</li> <li style="text-align: justify;">தைக்கால்</li> <li style="text-align: justify;">கொள்ளிடம்</li> <li style="text-align: justify;">ஆணைகாரன்சத்திரம்</li> <li style="text-align: justify;">நல்லூர்</li> <li style="text-align: justify;">நாதல்படுகை&nbsp;</li> <li style="text-align: justify;">மகேந்திரப்பள்ளி</li> <li style="text-align: justify;">சரஸ்வதிவிளாகம்</li> <li style="text-align: justify;">அளக்குடி</li> <li style="text-align: justify;">புளியந்துறை</li> <li style="text-align: justify;">பழையார்</li> <li style="text-align: justify;">புதுப்பட்டிணம்</li> <li style="text-align: justify;">மாதானம்&nbsp;</li> <li style="text-align: justify;">பழையபாளையம்</li> <li style="text-align: justify;">பச்சைபெருமாநல்லூர்&nbsp;</li> <li style="text-align: justify;">சியாளம்&nbsp;</li> <li style="text-align: justify;">தாண்டனவன்குளம்&nbsp;</li> <li style="text-align: justify;">மடவாமேடு</li> </ul> <p style="text-align: left;">மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்</p> <h3 style="text-align: left;">மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்கள்&nbsp;</h3> <p style="text-align: left;">இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் நாளைய தினம் 06.09.2025 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரேணுகா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;</p> <p style="text-align: left;">எதிர்வரும் 06.09.2025 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை அர்பன் மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.</p> <h3 style="text-align: left;">மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்&nbsp;</h3> <ul style="list-style-type: square; text-align: left;"> <li style="text-align: justify;">மயிலாடுதுறை நகரம்</li> <li style="text-align: justify;">பட்டமங்கலத்தெரு</li> <li style="text-align: justify;">மகாதான தெரு</li> <li style="text-align: justify;">அரசு மருத்துவமனை ரோடு</li> <li style="text-align: justify;">கூறைநாடு</li> <li style="text-align: justify;">காவேரி நகர்</li> <li style="text-align: justify;">நாராயணன்பிள்ளை சந்து</li> <li style="text-align: justify;">தரங்கை சாலை</li> <li style="text-align: justify;">மன்னன்பந்தல்</li> <li style="text-align: justify;">மூவலூர்</li> <li style="text-align: justify;">அரையாபுரம்</li> <li style="text-align: justify;">சேமங்கலம்</li> <li style="text-align: justify;">ஆலவெளி</li> <li style="text-align: justify;">வடகரை</li> <li style="text-align: justify;">சீர்காழி மெயின் ரோடு</li> <li style="text-align: justify;">தருமபுரம்</li> <li style="text-align: justify;">மாவட்ட ஆட்சியர் அலுவலகம்</li> <li style="text-align: justify;">ரயிலடி</li> <li style="text-align: justify;">எலந்தங்குடி&nbsp;</li> <li style="text-align: justify;">மங்கைநல்லூர்</li> <li style="text-align: justify;">வழுவூர்</li> <li style="text-align: justify;">திருவிழந்தூர்</li> <li style="text-align: justify;">சோழசக்காநல்லூர்</li> <li style="text-align: justify;">ஆனதாண்டவபுரம்</li> <li style="text-align: justify;">மணக்குடி</li> <li style="text-align: justify;">சீனிவாசபுரம்</li> </ul> <p style="text-align: left;">ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: left;">மாறுதலுக்கு உட்பட்டது&nbsp;</h3> <p style="text-align: left;">மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
Read Entire Article