Madurai Power Shutdown: மதுரை மின் தடை: நாளை (10.06.2025) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! காரணம் என்ன?

10 months ago 13
ARTICLE AD
<p>Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.</p> <p><strong>மாதாந்திர மின் பராமரிப்பு பணி</strong></p> <p>தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. &nbsp;மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். இந்நிலையில் மதுரை சமயநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக சமயநல்லூர் பகுதி மின் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்.</p> <div dir="auto"><strong>மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">சமயநல்லூர், தேனூர், கட்டப்புளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி உள்ளிட்ட பகுதியாகும்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">அதே போல் <strong>மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர்</strong> இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மின் தடை செய்யப்படும் பகுதிகள்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் ஆகும்.</div>
Read Entire Article