Lok Sabha Election 2024: தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு

1 year ago 6
ARTICLE AD
<p>மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது.</p> <p>இதில் பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டிடுகிறார்.&nbsp;</p> <p>இந்திய நாடாளுமன்ற தேர்தலின் அட்டவணை கடந்த 16ஆம் தேதி வெளியாகிய நிலையில் வெற்றிகரமாக இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்தான் இன்று 7ஆம் கட்ட தேர்தல் நடக்கிறது.&nbsp;</p> <p>முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கான 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.&nbsp;</p> <p>இதையடுத்து ஏப்ரல் 26, மே 7, 13,20 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.</p> <h2><strong>முக்கிய வேட்பாளர்கள் யார் யார்..?&nbsp;</strong></h2> <p>ஏழாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மிசா பாரதி வரை பல பேர் தேர்தலில் களமிறங்குகின்றன. வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி, கோரக்பூர் தொகுதியில் ரவி கிஷன், பாட்னா சாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத், பாட்லிபுத்ராவில் இருந்து மிசா பார்தி, பாஜகவின் கங்கனா ரனாவத் களத்தில் உள்ளனர். இதுபோக, காங்கிரஸில் இருந்து விக்ரமாதித்ய சிங் மண்டி தொகுதியிலும்,&nbsp; டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹார்பர் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article