<p style="text-align: justify;"> தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் எப்போதும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில், ஒரு மாறுபட்ட 'ஃபியூச்சரிஸ்டிக்' (Futuristic) உலகத்தை மையமாக வைத்து வெளியாகியிருக்கிறது இந்தத் திரைப்படம். புதுமையான களம், பிரதீப் ரங்கநாதனின் எஸ்.ஜே. சூர்யாவின் அதகளம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? இதோ முழுமையான விமர்சனம்.</p>
<h2 style="text-align: justify;">படத்தின் கரு: </h2>
<p style="text-align: justify;">2040 ஆம் ஆண்டில் மனிதர்களின் காதலை தீர்மானிக்கு ஒரு ஆப், அந்த ஆப்பால் ஹீரோவின் காதல் பாதிக்கப்படுகிறது, அதன் பின்னர் அந்த ஆப்பை உருவாக்கிய எஸ்.ஜே சூர்யாவை நடக்கும் காமெடி கலந்த ரொமாண்டிக் காதல் கதை </p>
<h2 style="text-align: justify;">நடிப்பு எப்படி?</h2>
<p style="text-align: justify;">படத்தின் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் வைப் வாசா என்கிற கேரக்டரில் காதல், காமெடி, எம்மோஷன் காட்சிகளில் வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். அதே போல் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா பக்கவாக பொருந்தியுள்ளார். ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நல்லப்படியாக கையாண்டர், ஆனால் எமோஷனல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் பெட்டராக செய்து இருக்கலாம். </p>
<p style="text-align: justify;">குறிப்பாக யோகி பாபு, ஷா ரா மற்றும் பிரதீப் ரங்கநாதனின் காமெடி காம்போ ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக சீமான் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் ஓரளவு நல்ல நடிப்பை தந்துள்ளார்.</p>
<h2 style="text-align: justify;" data-path-to-node="7">படத்தின் பலம் இது தான்</h2>
<p style="text-align: justify;" data-path-to-node="7">தொழில்நுட்ப ரீதியாக படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. <strong data-path-to-node="12" data-index-in-node="55">புரொடக்ஷன் வேல்யூ (Production Values)</strong> டாப் நாட்ச் ரகம். விஷுவல்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இதுமட்டுமில்லாமல் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கேமராமேன் ரவி வர்மன் கேமரா வர்க் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.</p>
<h2 style="text-align: justify;" data-path-to-node="6"><strong data-path-to-node="6" data-index-in-node="0">படம் எப்படி இருக்கிறது?</strong></h2>
<p style="text-align: justify;" data-path-to-node="7">ஒரு நல்ல கருவை கையில் எடுத்த இயக்குனர், அதைத் திரைக்கதையாக மாற்றுவதில் சறுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.</p>
<p style="text-align: justify;" data-path-to-node="7">படத்தின் மிகப்பெரிய பலமே அதன் உலகக்கட்டமைப்புதான்எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதை மிகவும் வினோதமாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் காட்டியிருக்கிறார்கள். முதல் பாதியில் இந்த புதிய உலகம் நமக்குப் பழகும் வரை காட்சிகள் வேடிக்கையாகவும், ரசிக்கும்படியும் நகர்கின்றன.</p>
<p style="text-align: justify;" data-path-to-node="7">குறிப்பாக படத்தின் முதல் பாதி கதாப்பாத்திரங்களின் அறிமுகம் மற்றும் காமெடி நன்றாக வர்கவுட் ஆனது. ஆனால் இரண்டாம் பாதியில் படத்தின் நீளம் மற்றும் காட்சிகள் எதுவும் பெரியளவில் எடுப்படவில்லை. என்னதான் பிரதீப் மற்றும் எஸ்.ஜே சூர்யாவின் நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் திரைக்கதையில் ஏற்ப்பட்ட சறுக்கலை சரி செய்யமுடியவில்லை.</p>
<p style="text-align: justify;" data-path-to-node="7">ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த ஐடியாவை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுச் செதுக்கியிருந்தால், ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும்.</p>