<p>கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p>
<h2><strong>என்னென்ன லாட்டரிகள்?</strong></h2>
<p><br />கேரளா லாட்டரி என்பது கேரள அரசால் நடத்தப்படும் முழுமையாக சட்டபூர்வமான, பாரதிராஜ்ய அரசின் அனுமதி பெற்ற லாட்டரி திட்டமாகும். இது, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Weekly & Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்பர் டிரா (Bumper Draws) என்பவற்றைக் கொண்டுள்ளது.</p>
<p>கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அரசு லாட்டரி அமைப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. லாட்டரி குலுக்கல் நேர்மையாக நடைபெற அரசு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர். தினசரி பல்வேறு பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. </p>
<p><br />அந்த வகையில் இன்று (பிப்ரவரி 6, 2026) சுவர்ண கேரளம் லாட்டரி குலுக்கல் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிய இங்கே இணைந்திருங்கள். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/do-this-if-you-can-t-sleep-249225" width="631" height="381" scrolling="no"></iframe></p>