Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு 'டெண்டர்'.. தீர்ந்தது தலைவலி.. களத்தில் இறங்கிய மாநகராட்சி

7 months ago 5
ARTICLE AD
<p style="text-align: left;"><span style="color: #ba372a;"><strong>Kanchipuram New Bus Stand Latest News: காஞ்சிபுரம் பொன்னேரிகரை பகுதியில், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.</strong></span></p> <h3 style="text-align: left;">காஞ்சிபுரம் மாநகரம்</h3> <p style="text-align: left;">காஞ்சிபுரம் மாநகரம் வரலாற்று ரீதியாகவே மிகவும் சிறப்பு வாய்ந்த நகரங்களில், ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் பட்டு புடவை மற்றும் கோயில்களுக்கு மிகவும் புகழ் பெற்ற இடமாகவும் இருந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தினமும் காஞ்சிபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.&nbsp;</p> <p style="text-align: left;">காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் இருக்கும் நகரம் என்பதால், பணி நிமித்தமாக காஞ்சிபுரம் வழியாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் காஞ்சிபுரத்திற்கு அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.&zwnj;&nbsp;</p> <h3 style="text-align: left;">காஞ்சிபுரம் பேருந்து நிலையம் - Kanchipuram Bus Stand&nbsp;</h3> <p style="text-align: left;">காஞ்சிபுரம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேருந்து நிலையம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிலையம் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.&nbsp;</p> <p style="text-align: left;">காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, வேலூர், பெங்களூர், வந்தவாசி, பாண்டிச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ,திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.</p> <h3 style="text-align: left;">காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் - Kanchipuram New Bus Stand&nbsp;</h3> <p style="text-align: left;">மக்கள் தொகை அதிகமான நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்தநிலையில், காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதியாக 38 கோடி ரூபாய் ஒதுக்கியது. இருப்பினும் இன்னும் புதிய பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வதில் இடுப்பறி இருந்து வந்தது. நிதி ஒதுக்கப்பட்ட பிறகும், பேருந்து நிலையம் கட்டப்படாமல் இருக்கும் ஒரே மாநகராட்சியாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது.</p> <p style="text-align: left;">பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும் நிர்வாக சிக்கல் காரணமாக, பேருந்து நிலையம் இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.</p> <h3 style="text-align: left;">காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் எங்கே அமைகிறது ? Kanchipuram New Bus Stand Location&nbsp;</h3> <p style="text-align: left;">இந்தநிலையில், பொன்னேரிக்கரை பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் வழியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. 19 ஏக்கர் பரப்பளவு பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.&nbsp;</p> <h3 style="text-align: left;">நீதிமன்றத்தில் வழக்கு&nbsp;</h3> <p style="text-align: left;">பொன்னேரிக்கரை அருகே பேருந்து நிலையம் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு வழக்கு அறக்கட்டளை நிர்வாகத்தினர் தடை உத்தரவு பெற்றனர். இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு முன்பு கல்வி நிறுவனம் அருகே அரசு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முயன்ற போது, 19 ஏக்கர் நிலம் தங்களுடையது என அறக்கட்டளை நிர்வாகம் இழப்பீடு கோரி வழக்கத் தொடர்ந்தனர்.&nbsp;</p> <p style="text-align: left;">இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் சம்பந்தமாக தனியார் அறக்கட்டளைக்கு, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது இதை எதிர்த்தும் தனியார் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மூன்று வழக்குகளும் ஒன்றாக சேர்த்து நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.</p> <h3 style="text-align: left;">திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்</h3> <p style="text-align: left;">இந்தநிலையில் காஞ்சிபுரம் பொன்னேரிகரை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான, முழு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபோதும் நீதிமன்றங்களில் வழக்கு இருந்தாலும், சம்பந்தப்பட்ட இடம் அரசு நிலம் என்பதற்கான முழு ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>
Read Entire Article