Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்

1 month ago 2
ARTICLE AD
<p>நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார். அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால் அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p> <p>அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், காளியம்மாள் இன்று இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:</p> <h2><strong>அதிமுகவில் சேர்ந்தது ஏன்?</strong></h2> <p>&rsquo;&rsquo;வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். &nbsp;விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இருந்து எனது அரசியல் பயணம் தொடரும்.&nbsp;</p> <h2><strong>மரண தண்டனை அளிக்க வேண்டும்</strong></h2> <p>12 வயது, 14 வயது எனக் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவள்தான். எனினும் இத்தகைய கயவர்களைக் கழுவில் ஏற்றினால்தான் குற்றங்கள் குறையும்.&rsquo;&rsquo;</p> <p>இவ்வாறு காளியம்மாள் தெரிவித்தார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/what-is-the-price-of-a-top-cheap-induction-stove-253003" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article