Kalai Thiruvizha 2024: ஆடல், பாடலில் ஆர்வமா? 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் கலைத் திருவிழாவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">இந்த அறிவிப்பை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார்.</p> <p>தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 6 முதல்&zwnj; 12-ஆம்&zwnj; வகுப்பு வரை பயிலும்&zwnj; அனைத்து மாணவர்களின்&zwnj; கலைத் &zwnj;திறனை வெளிப்படுத்தும்&zwnj; வகையில்&zwnj; கலைத்திருவிழா அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டார&zwnj;, மாவட்ட&zwnj; மற்றும்&zwnj; மாநில அளவில்&zwnj; நடைபெற்று வந்தது.</p> <h2><strong>தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் கலைத் திருவிழா</strong></h2> <p>அதனைத்&zwnj; தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல்&zwnj; அனைத்து அரசு மற்றும்&zwnj; அரசு உதவி பெறும்&zwnj; பள்ளிகளில்&zwnj; 1 முதல்&zwnj; 5 ஆம்&zwnj; வகுப்பு வரை பயிலும்&zwnj; மாணவர்களும்&zwnj; பங்கேற்கும்&zwnj; வகையில்&zwnj; கலைத்திருவிழா நடத்தப்படும்&zwnj; என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.</p> <p>இதன்படி, தமிழகத்தில்&zwnj; உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்&zwnj; கலைத்&zwnj; திறன்களை வெளிக்கொணரும்&zwnj; விதமாக, அரசுப்&zwnj; பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள்&zwnj; கலை அரங்க செயல்பாடுகள் மூலம்&zwnj; வழங்கப்பட்டது. 6 முதல்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு வரை பயிலும்&zwnj; மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்&zwnj; மற்றும்&zwnj; மாநில அளவில்&zwnj; கலைத்திருவிழா போட்டிகள்&zwnj; நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்&zwnj; சான்றிதழ்களும்&zwnj; வழங்கப்பட்டன.</p> <h2><strong>கலையரசன்&zwnj;, கலையரசி பட்டம்</strong></h2> <p>மாநில அளவில்&zwnj; கலையரசன்&zwnj;, கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால்&zwnj; விருதுகளும்&zwnj; சான்றிதழ்களும்&zwnj; வழங்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்பட்டது.</p> <p>2024-25 ஆம்&zwnj; கல்வியாண்டில்&zwnj; அரசு பள்ளிகளில்&zwnj; 1 முதல்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு வரை பயிலும்&zwnj; மாணவர்களுக்கும்&zwnj; அரசு உதவிபெறும்&zwnj; பள்ளிகளில்&zwnj; 1 முதல்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு வரை பயிலும்&zwnj; மாணவர்களுக்கும்&zwnj; தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள்&zwnj; நடத்தப்பட உள்ளது.</p> <h2><strong>கலைத் திருவிழா</strong><strong> 2024-25</strong></h2> <p>கடந்த ஆண்டு இக்கலைத்திருவிழா போட்டிகள்&zwnj; "சங்கமிப்போம்&zwnj; சமத்துவம்&zwnj;படைப்போம்&zwnj;" என்ற மையக்கருத்தின்&zwnj; அடிப்படையில்&zwnj; நடைபெற்றது. அதுபோன்று இந்த ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்&zwnj;, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்&zwnj; வளப்படுத்துதல்&zwnj; சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்&zwnj; நோக்கத்துடன்&zwnj; "சூழல்&zwnj; பாதுகாப்பு அனைவரின்&zwnj; பொறுப்பு" என்ற மையக்கருத்தின்&zwnj; அடிப்படையில்&zwnj; நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.</p> <h2><strong>ஆக.28 வரை அவகாசம்</strong></h2> <p>முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பங்கேற்பாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்ய ஆக.28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p> <p>அதேபோல, வெற்றி பெற்றவர்களின் விவரங்களை செப்.3-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தத் தேதி செப்டம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <h2><strong>கலைத்திருவிழா</strong><strong> 2024-25 </strong><strong>பிரிவுகள்</strong><strong>&zwnj;</strong></h2> <p>2024-25 ஆம்&zwnj; ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்&zwnj; பின்வருமாறு ஐந்து பிரிவுகளில்&zwnj; நடைபெறும்&zwnj;.</p> <p>பிரிவு 1-&nbsp; 1 மற்றும்&zwnj; 2 ஆம்&zwnj; வகுப்பு<br />பிரிவு 2 - 3 முதல்&zwnj; 5 ஆம்&zwnj; வகுப்பு வரை<br />பிரிவு 3 - 6 முதல்&zwnj; 8 ஆம்&zwnj; வகுப்பு வரை<br />பிரிவு&nbsp; 4 - 9 மற்றும்&zwnj; 10 ஆம்&zwnj; வகுப்பு<br />பிரிவு 5 - 11 மற்றும்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு</p>
Read Entire Article