Jobs Alert: காவல்துறையில் ஆய்வாளர், எஸ்ஐ, தலைமை காவலர் பணியிடங்கள்: விண்ணப்பிக்கலாம்- எப்படி?

1 year ago 7
ARTICLE AD
<p>முன்னாள்&zwnj; இராணுவ வீரர்கள்&zwnj;/ முன்னாள்&zwnj; துணை இராணுவப் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்&zwnj; வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p> <p>இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:&nbsp;</p> <p>01.07.2024 நாளன்று 50 வயதுக்குக்&zwnj; கீழுள்ள முன்னாள்&zwnj; இராணுவ&nbsp;வீரர்கள்&zwnj;/ முன்னாள்&zwnj; துணை இராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</p> <h2><strong>என்ன பதவிக்கு?</strong></h2> <p>தமிழ்நாடு காவல்துறையின்&zwnj; வெடிகுண்டு கண்டறிதல்&zwnj; மற்றும்&zwnj; செயலிழக்கம்&zwnj; பிரிவின்&zwnj; கீழ்க்&zwnj;கண்ட பதவிகளில்&zwnj; பணிபுரிய ஆட்கள் தேவை.</p> <p>எஸ்&zwnj;.எஸ்&zwnj;.எல்&zwnj;.சி. அல்லது எஸ்&zwnj;.எஸ்&zwnj;.சி. தேர்ச்சி பெற்று, இராணுவம்&zwnj; அல்லது துணை ராணுவப்&zwnj; படைகளில்&zwnj; குறைந்தபட்சம்&zwnj; 10 ஆண்டுகள்&zwnj;&nbsp;பணிபுரிந்து இருக்க வேண்டும்.</p> <p>அதேபோல இராணுவம்&zwnj;, NSG, CAPF, CME / புனே, போன்றவற்றில்&zwnj; வெடிகுண்டு கண்டறிதல்&zwnj; மற்றும்&zwnj; செயலிழக்கம்&zwnj; பிரிவுகளால்&zwnj; நடத்தப்படும்&zwnj; பயிற்சியில்&zwnj; தகுதி பெற்று இருப்பது அவசியம், இத்துறை மற்றும்&zwnj; பிற தொடர்புடைய பிரிவில்&zwnj; அறிவு மற்றும்&zwnj; நடைமுறை அனுபவம்&zwnj; ஆகிவை பெற்று இருக்க வேண்டும்.</p> <h2><strong>ஒப்பந்த அடிப்படையில்&zwnj; வேலை</strong></h2> <p>மேலும் தமிழ்&zwnj; மற்றும்&zwnj; ஆங்கிலத்தில்&zwnj; போதிய பயிற்சி அளிக்கும்&zwnj; திறன்&zwnj; பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்&zwnj; வரவேற்கப்படுகின்றன.&nbsp;ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில்&zwnj; இந்த வேலை வழங்கப்படுகிறது. தேவைப்படின்&zwnj; இது நீட்டிக்கப்படலாம்&zwnj;.</p> <p>1) ஆய்வாளர்&zwnj;- BDDS &nbsp;(முன்னாள்&zwnj; சுபேதார்&zwnj;/ சுபேதார்&zwnj; மேஜர்&zwnj;) - 7 பணியிடங்கள்&zwnj;</p> <p>ஊதிய அளவு: ரூ.37,700- ரூ.11,95,000</p> <p>&nbsp;(1) உதவி ஆய்வாளர்&zwnj;- BDDS &nbsp;(முன்னாள்&zwnj; நாயிப்&zwnj; சுபேதார்&zwnj;) - 21&nbsp;பணியிடங்கள்&zwnj;</p> <p>ஊதிய அளவு: ரூ.36,900- ரூ.1,16,600</p> <p>(iii) தலைமை காவலர்&zwnj;- BDDS &nbsp;(முன்னாள்&zwnj; ஸஹவில்தார்&zwnj; / நாயக்&zwnj;) - 36 பணியிடங்கள்&zwnj;</p> <p>ஊதிய அளவு: ரூ.20,600- ரூ. 65,500</p> <h2><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2> <p>தகுதியான விண்ணப்பதாரர்கள்&zwnj; தங்களின்&zwnj; சுய விவரங்களுடன்&zwnj;&nbsp;(Biodata) கூடிய விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின்&zwnj;&nbsp;நகல்களுடன்&zwnj; அனுப்ப வேண்டும்&zwnj;.</p> <p>காவல்&zwnj; துறைத்&zwnj; தலைவர்&zwnj;, செயலாக்கம்&zwnj;, மருதம்&zwnj;, எண்&zwnj;.17, போட்&zwnj;. கிளப்&zwnj; சாலை, இராஜா அண்ணாமலைபுரம்&zwnj;, சென்னை- 28 என்ற&nbsp;முகவரிக்கு அனுப்ப வேண்டும்&zwnj;. ஆவணங்களை தபால்&zwnj; மூலம்&zwnj; 14.11.2024 க்குள்&zwnj; அனுப்ப வேண்டியது முக்கியம்.</p> <p>தகுதியான விண்ணப்பதாரர்கள்&zwnj; மட்டும்&zwnj; சான்றிதழ்&zwnj; சரிபார்ப்பு மற்றும்&zwnj; தேர்வு (எழுத்து மற்றும்&zwnj; நடைமுறைத்&zwnj; தேர்வுகள்&zwnj;) போன்றவற்றுக்கு தனிப்பட்ட அழைப்புக்&zwnj; கடிதங்கள்&zwnj; மூலம்&zwnj; அழைக்கப்படுவார்கள்&zwnj;.</p> <p>இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள்&zwnj; மற்றும்&zwnj; நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article