<p style="text-align: justify;">ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்கள் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை தக்கவைத்துள்ளது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியையும், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவையும் தக்கவைத்துள்ளது. அதே நேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p>