IIT Madras: ’’திறமை- அனைவருக்கும் விளையாட்டு’’ ஐஐடி சென்னை அசத்தல் அறிமுகம்!

1 year ago 7
ARTICLE AD
<p>ஐஐடி சென்னையில் உள்ள NCAHT, R2D2 மையங்கள், RRD நிறுவனத்துடன் இணைந்து, &lsquo;திறமை- அனைவருக்கும் விளையாட்டு&rsquo; என்ற விளையாட்டுப் போட்டியை நடத்துகின்றன. இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.</p> <p>மாற்றுத் திறனாளிகளுக்கான தகவமைப்பு விளையாட்டுப் போட்டிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 24 வரை நடைபெறும் இந்நிகழ்வில் மொத்தம் 100 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.</p> <p>நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணன் என்.கும்மாடி, &ldquo;<em>மாற்றுத்திறனாளி</em> <em>மாணவர்களை</em><em> (SwD) </em><em>ஊக்குவிக்கும்</em> <em>வகையில்</em> <em>உள்ளடக்கிய</em> <em>கல்வி</em><em> (IE) </em><em>முயற்சியின்</em> <em>கீழ்</em> <em>பல்வேறு</em> <em>சேவைகளை</em> <em>ஐஐடி சென்னை</em> <em>செயல்படுத்தி</em> <em>வருகிறது</em><em>. </em><em>உள்ளடக்கிய</em> <em>கல்விக்கான</em> <em>பிரத்யேக</em> <em>ஆசிரிய</em> <em>ஆலோசகரைக்</em> <em>கொண்டு</em> <em>மாற்றுத்</em> <em>திறனாளிகளுக்கான</em> <em>பயிற்சி</em><em>, </em><em>கல்வித்</em> <em>தங்குமிடங்கள்</em><em>, </em><em>தன்னார்வ</em> <em>சேவைகள்</em><em>, </em><em>அணுகக்கூடிய</em> <em>கற்றல்</em> <em>வளங்களை</em> <em>வழங்குதல்</em> <em>போன்ற</em> <em>சேவைகளை</em> <em>வழங்கத்</em> <em>தேவையான</em> <em>கட்டமைப்புகள்</em> <em>மற்றும்</em> <em>செயல்முறைகளை</em> <em>இக்கல்வி</em> <em>நிறுவனம்</em> <em>உருவாக்கியுள்ளது</em><em>. </em></p> <p><em>இதுதவிர</em><em>, </em><em>உள்ளடக்கிய</em> <em>கல்விக்காக</em> <em>நிபுணர்களுடன்</em> <em>இணைந்து</em> <em>செவிப்புலன்</em><em>- </em><em>காட்சி</em><em>- </em><em>இயக்கத்திற்கான</em> <em>உதவித்</em> <em>தொழில்நுட்பங்களையும்</em> <em>இக்கல்வி</em> <em>நிறுவனம்</em> <em>வழங்குகிறது</em><em>. </em><em>உளவியல்</em> <em>தேவைப்படும்</em> <em>இடங்களில்</em> <em>மாற்றுத்</em> <em>திறனாளிகளுக்கு</em> <em>கவுன்சிலிங்</em> <em>வழங்குவதுடன்</em><em>, </em><em>பல்வேறு</em> <em>நல்வாழ்வு</em> <em>நடவடிக்கைகளையும்</em> <em>இக்கல்வி</em> <em>நிறுவனம்</em> <em>மேற்கொண்டு</em> <em>வருகிறது</em>&rdquo; எனத் தெரிவித்தார்.</p> <p><strong>மூன்று முறை நடத்தத் திட்டம்</strong></p> <p>&nbsp;&lsquo;திறமை- அனைவருக்கும் விளையாட்டு&rsquo; நிகழ்வுகளை 2024-25ல் மூன்று முறை நடத்தத் திட்டமிடப்பட்டு அதில் முதலாவது நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு நிகழ்வுகள் மூன்றுநாள் விளையாட்டு முகாமாக நடத்தப்படும். முதன்மையாக இயக்கக் குறைபாடுள்ள நபர்களை வெவ்வேறு தகவமைப்பு விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தி&nbsp; பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளில் அமெச்சூர், தொடக்க அனுபவமுள்ள சுமார் 100 பங்கேற்பாளர்கள் பயிற்சியாளர்களைத் தொடர்பு கொள்ளவும், விளையாட்டுகளில் ஈடுபடவும், தகவமைப்பு விளையாட்டுச் சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p> <p>இறுதி நிகழ்வில் அறிவாற்றல், செவித்திறன், பார்வைத்திறன் குறைபாடு உள்ள பரந்த குழுக்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தும் விளையாட்டுத் திருவிழா நடைபெறும். குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளைக் கவனித்துக் கொள்வோருக்கு வேடிக்கை அளிக்கும் நிகழ்வாகவும் இருக்கும்.</p> <p><strong>நடைபெற</strong> <strong>உள்ள</strong> <strong>விளையாட்டு</strong> <strong>நிகழ்வுகள்</strong> <strong>பின்வருமாறு</strong><strong>:</strong></p> <ol> <li>சக்கர நாற்காலி கூடைப்பந்து</li> <li>சக்கர நாற்காலி பூப்பந்து</li> <li>சக்கர நாற்காலி டென்னிஸ்</li> <li>சக்கர நாற்காலி கிரிக்கெட்</li> <li>சக்கர நாற்காலி பந்தயம்</li> <li>டேபிள் டென்னிஸ்</li> <li>எறிதல் நிகழ்வுகள் - ஈட்டி, வட்டு, குண்டு எறிதல்</li> <li>போசியா</li> </ol>
Read Entire Article