<p><strong>Indias Iconinc Railway Bridge:</strong> வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டிய, இந்தியாவில் உள்ள மிக அழகான 5 ரயில்வே பாலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.</p>
<h2><strong>ரயில்வே பாலங்கள்:</strong></h2>
<p>இந்திய ரயில்வே பாலங்கள் பொறியியலின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். அவை பிரம்மிக்க வைக்கும் வகையில் மலைகள், ஆறுகள் மற்றும் அடர்ந்த காடுகள் போன்ற சவாலான நிலப்பரப்புகளில் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் முக்கிய போக்குவரத்து இணைப்புகளாக மட்டுமல்லாமல், சுற்றியுள்ள நிலப்பரப்புகளின் அற்புதமான காட்சிகளையும் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றன. இவற்றில் பல கட்டமைப்புகள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலை மகத்துவத்திற்காக பார்வையாளர்களை ஈர்க்கின்றன. கண்ணுக்கினிய அழகு மற்றும் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்திற்காக பார்க்க வேண்டிய இந்தியாவின் மிக முக்கிய 5 ரயில் பாலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. </p>
<h2><strong>5 தனித்துவமான ரயில்வே பாலங்கள்:</strong></h2>
<h3><strong>பாம்பன் பாலம்:</strong></h3>
<p>தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவானதுபாம்பன் பாலத்தின் மூலம் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 1914 இல் வணிகத்திற்காக திறக்கப்பட்டபோது நாட்டின் முதல் கடல் பாலமாகும். தற்போது அந்த பாலத்திற்கு மாற்றாக, அந்த பாலத்திற்கு இணையான பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. </p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/09/5a2da0939e033ff646220ce7e72ec0c01728460659401732_original.jpg" /></p>
<p> <strong> பாம்பன் பாலம் (Image source: Twitter/ UpdatesChennai)</strong></p>
<h3><strong>ரயில் மற்றும் சாலை பாலம்:</strong></h3>
<p>இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை பாலம் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அசாமில் அமைந்துள்ளது. இந்த பாலம் சக்தி வாய்ந்த பிரம்மபுத்திராவின் மூச்சடைக்கக்கூடிய அழகு நிறைந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. </p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/09/86a7fd0d066f374335ed60f99a7d678c1728460764573732_original.jpg" /></p>
<p><strong> ரயில் மற்றும் சாலை மேம்பாலம் (Image source: Twitter/ RailMinIndia)</strong></p>
<h3><strong>வேம்பநாடு ரயில் பாலம்:</strong></h3>
<p>வேம்பநாடு ரயில் பாலம் வேம்பநாடு ஏரியைக் கடந்து, எடப்பள்ளியை வல்லார்பாடத்துடன் இணைக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் பாதைக்கு பெயர் பெற்ற இந்த பாலம், கேரளாவின் உப்பங்கழியின் அழகிய காட்சியை பயணிகளுக்கு வழங்குகிறது. இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலங்களில் ஒன்றான இந்த ரயில் பாலம் அதன் அமைதியான சுற்றுப்புறம் மற்றும் அமைதியான நீர் காட்சிகளுடன் பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது.</p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/09/ad5f0063d45e0aa4189da3a409aef5321728460878212732_original.jpg" /></p>
<p> <strong>வேம்பநாடு ரயில் பாலம் (Image source: Twitter/ IndiaTales7)</strong></p>
<h3><strong>செனாப் பாலம்:</strong></h3>
<p>உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்முவில் அமைந்துள்ள செனாப் பாலம் ஆகும். இந்த பாலத்தின் உயரம் ஈபிள் கோபுரத்தை விட சுமார் 35 மீட்டர் அதிகமாக உள்ளது. பாலம் நதி மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை வழங்குகிறது.</p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/09/8a0041bac87a916a192d44c5b2262b5b1728460992494732_original.jpg" /></p>
<p><strong> செனாப் பாலம் (Image source: Twitter/ 811GK)</strong></p>
<h3><strong>ஷராவதி பாலம்:</strong></h3>
<p><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/09/3e927f9fba6f261d3007e7a2f40d919e1728461092894732_original.jpg" /></strong></p>
<p><strong>ஷராவதி பாலம் (Image source: Twitter/ thewildaperture)</strong></p>
<p>கர்நாடகாவில் ஷராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஷராவதி பாலம், 2.060 மீட்டர்கள் கொண்ட மாநிலத்தின் மிக நீளமான ரயில் பாலமாகும். இந்த பாலம் ஆற்றின் சில அழகான காட்சிகளை வழங்குகிறது. மேலும் இருபுறமும் பசுமையான காடுகளின் பரப்பையும் ரசிக்கலாம்.</p>