ICC: அனைத்து வகை பள்ளிகளிலும்‌ உள்ளக புகார் குழு கட்டாயம்; விதிமுறைகள் வெளியீடு- என்னென்ன?

1 year ago 7
ARTICLE AD
<p>அனைத்து வகையான பள்ளிகளிலும்&zwnj; உள்ளக புகார் குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் அண்மையில் அறிவுறுத்தி இருந்த நிலையில், அதற்கான விதிமுறைகள் மீண்டும் நினைவூட்டப்பட்டு உள்ளன.</p> <p>அனைத்து வகைப் பள்ளிகளிலும்&zwnj; எற்படும்&zwnj; பாலியல்&zwnj; தொடர்பான குற்றங்களை தடுக்கவும்&zwnj;, பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணவிகள்&zwnj; மற்றும்&zwnj; பெண்களுக்கு எதிரான பாலியல்&zwnj; வன்கொடுமையில்&zwnj; இருந்து பாதுகாத்திட போக்சோ (Prevention Of Children from Sexual Offences Act ) 2012 மற்றும்&zwnj; பாதுகாக்கும்&zwnj; சட்டம்&zwnj; 2013 சட்டத்தினை மாநில அளவில்&zwnj; சமூக நலன்&zwnj; மற்றும்&zwnj; மகளிர்&zwnj; உரிமைத்துறை செயல்படுத்தி வருகிறது.</p> <p>இந்தச் சட்டத்தின்&zwnj; படி அனைத்து வகை பள்ளிகளிலும்&zwnj; உள்ளக புகார்&zwnj; குழுவை (Internal Complaints Committee &mdash; ICC ) கட்டாயம்&zwnj; அமைத்திட வேண்டும்&zwnj;.</p> <p>தங்கள்&zwnj; பள்ளிகளில்&zwnj; பாலியல்&zwnj; தொடர்பான குற்றங்களை தடுக்கவும்&zwnj;, புகார்&zwnj; தெரிவிக்கவும்&zwnj;, விசாரணை மேற்கொள்ளவும்&zwnj; தங்கள்&zwnj; அலுவலகம்&zwnj; மற்றும்&zwnj; பள்ளிகளில்&zwnj; உள்ளக புகார்&zwnj; குழுவானது உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதன்&zwnj; விவரத்தினை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்கள்&zwnj; கேட்டுக்&zwnj; கொள்ளப்பட்டுள்ளனர்.</p> <p>குழு உறுப்பினர்களை கீழ்க்காணும்&zwnj; விவரப்படி தேர்ந்தெடுத்து அமைக்க அறிவுறுத்தப்படுகிறது.</p> <p>1) குழுத்&zwnj; தலைவர்&zwnj; கட்டாயமாக பெண்&zwnj; உறுப்பினராக ஒருக்க வேண்டும்&zwnj;. அவர் பெண்&zwnj; தலைமை ஆசிரியர்&zwnj; / மூத்த பெண்&zwnj; ஆசிரியர்&zwnj; ஆக இருக்க வேண்டும்.</p> <p>2) இரண்டாவது மற்றும்&zwnj; மூன்றாவது உறுப்பினர்கள்&zwnj; பள்ளியில்&zwnj; உள்ள பெண்&zwnj; / ஆண்&zwnj; ஆசிரியர்கள்&zwnj; இடம்&zwnj; பெற வேண்டும்&zwnj;</p> <p>3) நான்காவது உறுப்பினர்&zwnj; மருத்துவர் / வழக்கறிஞர் / NGO Members இவர்களில் ஒருவர் &nbsp;&nbsp; இடம்பெற வேண்டும்&zwnj;</p> <p>4) உறுப்பினர்களில்&zwnj; 50% குறைவில்லாமல்&zwnj; பெண்&zwnj; உறுப்பினர்கள்&zwnj; கட்டாயம்&zwnj; இடம்&zwnj; பெற வேண்டும்&zwnj;.</p> <p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> <p>முன்னதாக, கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் நடத்தி இருந்தார். அதில், அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.</p> <p>புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club-களை ஏற்படுத்த வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article