<p> </p>
<p>அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>
<p>பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் பதினான்கு பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று இரவு முதல் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.</p>